தமிழகத்தில் தட்டச்சு தேர்வு இன்று (பிப்.24) தொடக்கம் – 2 லட்சம் பேர் பங்கேற்பு!
தமிழகத்தில் இன்று (பிப். 24) தட்டச்சு தேர்வு நடைபெற இருக்கிறது. இதில் சுமார் 2 லட்சம் மாணவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர்.
தட்டச்சு தேர்வு
தமிழகத்தில் அரசு அனுமதி வாங்கி சுமார் 3500 தட்டச்சு பயிற்சி நிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த மையங்களில் தமிழக தொழில் நுட்ப கல்வி இயக்ககம் சார்பில் ஆண்டுதோறும் இளநிலை தட்டச்சு, முதுநிலை தட்டச்சு தேர்வு என 2 நிலைகளில் தேர்வு. நடத்தப்படுகிறது. இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தட்டச்சு தேர்வு இன்று (பிப்.24) தொடங்குகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்த தேர்வு இன்று காலை 9 மணிக்கு நடைபெற இருக்கிறது. மேலும் இதில் சுமார் 2 லட்சம் மானவர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். தமிழகம் முழுவதும் 208 தேர்வு மையங்களில் பிப். 24, 25 என இரண்டு நாட்கள் இந்த தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வின் முடிவுகள் ஏப்ரல் 23 ஆம் தேதி வெளியாகும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.