குணசேகரன் இனி காலத்துக்கும் ஜெயில்ல தான் இருக்கனும்.. ஆப்பு வைத்த அப்பத்தா – எதிர்நீச்சல் சீரியல்!
ஆதி குணசேகரன் சில நாட்களாக ஊரில் இல்லாதது போல் எதிர்நீச்சல் சீரியலில் காட்டப்பட்டு வந்த நிலையில் கடந்த சில நாட்களாக குணசேகரனின் ஆட்டம் அதிக அளவில் இருந்து வருகிறது.
எதிர்நீச்சல் சீரியல்:
ஆதி குணசேகரனின் சொத்து மற்றும் பணத்தாசை காரணமாக குடும்பத்தில் உள்ளவர்கள் அனைவரும் படாத பாடு பட்டு வருகின்றனர். வீட்டு பெண்கள் அனைவரும் அடிமைகளை போல் நடத்தப்பட்டு வந்த நிலையில் தற்போது அவர்களுக்கான சுயமரியாதைக்கான தேடலை நோக்கி பயணிக்க தொடங்கியுள்ளனர். இந்நிலையில் ஊரிலிருந்து வந்த குணசேகரன் ஈஸ்வரியை சரமாரியாக அடித்து தாக்கியுள்ளார். இது வீட்டில் உள்ளவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குணசேகரின் ஆட்டத்தை அடக்குவதற்காக அப்பத்தா திடீரென்று சீரியலில் என்ட்ரி கொடுக்க உள்ளார். மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் அப்பத்தாவிடம் குணசேகரன் ஜீவானந்தத்தின் மனைவியை கொலை செய்ய கதிர் மற்றும் கிள்ளிவளவனிடம் பேசிய வீடியோ ஆதாரம் கிடைத்துள்ளது. இதை காட்டி அப்பத்தா குணசேகரனை ஜெயிலில் அடைக்க உள்ளார். இது தெரிந்த குணசேகரன் இந்த ஆதாரத்தை கைப்பற்றும் வரை சற்று அடக்கி வாசிக்க வேண்டும் என்று நினைத்துக் கொள்கிறார். இதனால் ஈஸ்வரியை அடித்ததற்காக அப்பத்தா மற்றும் ஈஸ்வரியிடம் மன்னிப்பு கேட்கிறார்.