தமிழகத்தில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமனம் – அரசிடம் வலுக்கும் கோரிக்கை!
தமிழகத்தில் கேங்மேன் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனடியாக பணி நியமனம் வழங்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் வலியுறுத்தி இருக்கிறார்.
பணி நியமனம்:
தமிழகத்தில் மின் உற்பத்தி, மின் பகிர்மான கழகத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கான தேர்வு மூன்று ஆண்டுகளுக்கு நடத்தப்பட்டது. இதில் 5493 பேர் தேர்ச்சி பெற்று இருப்பதாக முடிவுகள் வெளியானது. ஆனால் கொரோனா காரணமாக பணி நியமன ஆணைகள் வழங்கப்படாமல் இருந்தது. நிலைமை சுமூகமான போதும் தற்போது வரை பணி நியமனம் வழங்கப்படவில்லை.
Follow our Instagram for more Latest Updates
திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் மின்சாரத் துறை மானிய கோரிக்கை விவாதத்துடன் அந்த துறையின் அமைச்சர் பணி நியமனம் வழங்கப்படும் என தெரிவித்தார். ஆனால் தற்போது வரை அதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்த தேர்வில் தேர்ச்சி பெற்று காத்திருப்போர் சட்டப்பேரவை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி இருக்கின்றனர்.
தமிழகத்தில் மகளிருக்கான ரூ.1000 உரிமைத்தொகை திட்டம் – திட்டக்குழுவை சமர்ப்பிக்க உத்தரவு!
ஆனால் அரசு இது குறித்து செவி சாய்க்கவில்லை. எனவே இந்த விவகாரத்தில் முதல்வர் தலையிட்டு, தேர்ச்சி பெற்றவர்களுக்கு உடனே பணி நியமன ஆணைகளை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.