கொடைக்கானலில் சுற்றுலா பயணிகளுக்கு நாளை முதல் அனுமதி – வனத்துறை அறிவிப்பு!
கொடைக்கானலில் நாளை முதல் சுற்றுலா பயணிகள் மோயர் சதுக்கம் பகுதிகளுக்கு செல்ல அனுமதி என வனத்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல்:
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானலில் உலக புகழ் பெற்ற சுற்றுலாத்தளங்களில் ஒன்றாக விளங்கி வருகிறது. கோடை காலங்களில் மட்டுமல்லாமல் ஆண்டின் அனைத்து பருவங்களிலும் சுற்றுலா பயணிகள் கொடைக்கானலுக்கு வருகை புரிகின்றனர். அதிலும், குறிப்பாக வனத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும் மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தளங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்கின்றனர்.
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி .. ட்ரூனாட் சோதனைக்கு ICMR அனுமதி – கேரளா அரசு தகவல்!
இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு மோயர் சதுக்கம் பகுதிகளில் காட்டு யானைகளின் நடமாட்டம் இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது. இதனால், சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக கடந்த மூன்று நாட்கள் மோயர் சதுக்கம் பகுதிகளுக்கு செல்ல வனத்துறை தடை விதித்திருந்தது. இந்நிலையில், தற்போது மீண்டும் நாளை முதல் சுற்றுலா பயணிகள் வழக்கம் போல மோயர் சதுக்கம் பகுதியினையும் பார்வையிடலாம் என வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.