தமிழகத்தில் மீண்டும் உயரும் மின் கட்டணம் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் இந்த ஆண்டு வீடுகளுக்கு மின் கட்டணம் உயர்த்தப்படாத நிலையில் மத்திய அரசு மின் கட்டணத்தை உயர்த்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருவதாக மின் வாரியம் அறிவித்துள்ளது.
மின் கட்டணம்:
தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மின்சார உற்பத்தி மற்றும் பண வீக்கத்தின் அடிப்படையில் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது. மேலும், ஒவ்வொரு வருடமும் 4.7 சதவீதம் வரை மின் கட்டணம் உயர்த்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் கடந்த வருடம் ஜூலை மாதத்தில் மின் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
அதாவது, 200 யூனிட்டுக்களுக்கும் மேல் பயன்படுத்தும் வீடுகளுக்கு மின் கட்டணம் கூடுதலாக ரூபாய் 27.50 வசூல் செய்யப்படும் எனவும், 300 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் ரூபாய் 72.50 வசூலிக்கப்படும் எனவும், 400 யூனிட்டுக்கு மேல் பயன்படுத்தினால் மாதத்திற்கு ரூபாய் 147.50 கூடுதலாக வசூல் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.
ஆசிரியர்களுக்கு செக்… இனி லீவு கிடையாது – பள்ளிக்கல்விதுறையின் உத்தரவு!
இதனுடையே, இந்த ஆண்டு தமிழகத்தில் வீடுகளுக்கு எந்தவித மின்கட்டணமும் உயர்த்தப்படாமல் தொழில் நிறுவனங்களுக்கு மட்டும் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது. இந்நிலையில், தமிழகத்தில் மின் கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டு வருவதாகவும், மின் கட்டணத்தை உயர்த்தவில்லை எனில் மின் கட்டணத்திற்கான மானியம் வழங்கப்படாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.