தமிழகத்தில் இனி பைக் டாக்சிக்கு அனுமதியில்லை – போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் அறிவிப்பு!

0
தமிழகத்தில் இனி பைக் டாக்சிக்கு அனுமதியில்லை - போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் அறிவிப்பு!
தமிழகத்தில் இனி பைக் டாக்சிக்கு அனுமதியில்லை - போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் அறிவிப்பு!
தமிழகத்தில் இனி பைக் டாக்சிக்கு அனுமதியில்லை – போக்குவரத்து துறை அமைச்சர் திடீர் அறிவிப்பு!

தமிழகத்தில் இனி பைக் டாக்சிக்கு அனுமதி இல்லை என போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தற்போது முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பைக் டாக்சி:

தமிழகம் முழுவதும் பைக் டாக்சியில் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பு இல்லை என அவ்வப்போது குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. அதாவது, பைக் டாக்ஸியில் செல்லும் வாடிக்கையாளர்களிடம் அத்துமீறுவது, நகைகளை பறிப்பது போன்ற குற்றச்சாட்டுகளும் இருந்து வருவதால் தற்போது போக்குவரத்து துறை அமைச்சர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, தமிழகத்தில் பைக் டாக்சி ஓட்டுவதற்கு இதுவரை எந்தவித அனுமதியும் வழங்கப்படவில்லை எனவும், பைக் டாக்சியை வாடகைக்கு விடும் வண்டியாக ஒருபோதும் எடுத்துக் கொள்ள முடியாது எனவும் அறிவித்துள்ளார்.

தமிழக ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு – இன்று குறைதீர்ப்பு முகாம்!

இந்நிலையில், தமிழக அரசின் விதிமுறைக்கு எதிராக பைக் டேக்ஸி ஓட்டும் ஓட்டுநர்கள் மீது காவல்துறையினர் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். மேலும், ஆட்டோ, பேருந்தை காட்டிலும் பைக் டாக்ஸி தான் குறைவான கட்டணம் என்பதால் பொதுமக்கள் பலரும் இதன் மூலமாக பயனடைந்து வந்தனர். இந்நிலையில், தற்போது பைக் டேக்ஸி தடை செய்யப்பட இருக்கும் நிலையில் பொதுமக்கள் மத்தியில் இந்த அறிவிப்பு சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது

Follow our Instagram for more Latest Updates

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!