மரத்தை அகற்ற கோரி வழக்கு – உயர்நீதிமன்ற மதுரை பிறப்பித்த அதிரடி உத்தரவு!
திண்டுக்கல் மாவட்டத்தில் புளிய மரத்தை அகற்ற கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நீதிமன்றம் தற்போது முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
முக்கிய உத்தரவு:
தமிழகத்தில் சாலை விரிவாக்கம், குடிநீர் இணைப்புகளை சரிபார்த்தல், பாலம் கட்டுதல் பணிகளின் போது பாரம்பரிய மரங்களை வேரோடு வெட்டுவது வழக்கமாகியுள்ளது. இவ்வாறு மரங்களை வெட்டுவதால் மரங்களின் எண்ணிக்கையும் இயற்கை வளமும் வெகுவாக குறைந்து வருகிறது.
NABFINS நிறுவனத்தில் CSO பணி வாய்ப்பு – உடனே விண்ணப்பியுங்கள்!
அண்மையில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நபர் குளத்தை சுற்றி வளர்ந்துள்ள புளிய மரத்தை அகற்றி அதனை தூர்வார உத்தரவிட வேண்டும் என கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையில் உயர் நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
குளங்களை தூர்வார வேண்டும் என்பதற்காக புளிய மரங்களை அகற்ற உத்தரவிட முடியாது என்று தெரிவித்துள்ளது. மேலும் குளங்களை தூர்வார வேண்டும் என்பதற்காக புளிய மரங்களை வெட்டக்கூடாது என்றும் உத்தரவிட்டுள்ளது.