TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட் – இரட்டிப்பாகும் ஊதியம்.. நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை!
இந்தியாவின் முன்னணி ஐடி நிறுவனமான TCS தனது ஊழியர்களுக்கிடையே உள்ள ஊதிய ஏற்ற தாழ்வை சரி செய்ய முடிவு செய்துள்ளது. இதன் மூலம் ஊழியர்களின் ஊதியம் இரட்டிப்பாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊதிய ஏற்றத்தாழ்வு:
உலக அளவில் பல முன்னணி ஐடி நிறுவனங்கள் தங்களை செலவுகளை குறைக்கும் நோக்கில் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இதற்கு மத்தியில் இந்தியாவின் பிரபல ஐடி நிறுவனமான TCS தொடர்ந்து புதிய பணி நியமனங்களை மேற்கொண்டு வருகிறது. அதனை தொடர்ந்து அண்மையில் வெளியான தகவலின் படி TCS நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
நாடு முழுவதும் உள்ள மெட்ரோவில் பயணிக்க இனி ஒரே சிங்கார சென்னை அட்டை தான் – பயணிகள் மகிழ்ச்சி!
தற்போது ஊதியர்களுக்கிடையே உள்ள சம்பள வேறுபாட்டை குறைக்கும் முயற்சியில் இறங்கி உள்ளது. இது குறித்து பேசிய அந்நிறுவனத்தின் CHRO மலிந்தா லக்காட் நிறுவனம் ஊழியர்களின் திறமையை அதிகரிக்கவும், அவர்களின் ஊதியத்தை இரட்டிப்பாக்குவதற்கான வாய்ப்பை வழங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறியுள்ளார்.
மேலும் புதிதாக சேரும் ஊழியர்களுக்கு அதிகம் சம்பளம் கொடுப்பதை விட தற்போது நிறுவனத்தில் பணியில் இருக்கும் ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை வழங்குவதில் முதலீடு செய்து அவர்களின் திறமையை வளர்பதற்கான வாய்ப்பை அளிக்க முடிவு செய்துள்ளது.