தமிழகத்தில் இன்று (மார்ச் 23) இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை – மாவட்ட ஆட்சியர் உத்தரவு!
தமிழகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் இயங்கி வரும் 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று (மார்ச் 23) ஒரு நாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓரிக்கை பகுதியை அடுத்து குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் தனியாருக்கு சொந்தமான பட்டாசு உற்பத்தி ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை 20 ஆண்டுகளாக இயங்கி வரும் நிலையில் இதில் 30க்கு மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று (மார்ச் 22) பட்டாசு ஆலையில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் வந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். மேலும் தீயணைப்பு வாகனங்களில் 20க்கும் மேற்பட்ட வீரர்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வந்து தீயை அணைத்தார்.
பெரம்பலூர் கிருஷி விக்யான் கேந்திரா நிறுவனத்தில் வேலை – 10/12 ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்!
அதில் சிக்கி ஆலையின் உரிமையாளர் உள்ளிட்ட 9 பேர் உயிரிழந்து இருக்கின்றனர். மேலும் பலர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதனை தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்டம் குருவிமலை வளத்தோட்டம் பகுதியில் உள்ள 2 ஊராட்சி நடுநிலை பள்ளிகளுக்கு இன்று (மார்ச் 23) விடுமுறை விடப்பட்டுள்ளது. பட்டாசு ஆலை தீ விபத்து காரணமாக விடுமுறை விடப்பட்டுள்ளதாக விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.