தமிழகத்தில் சிப்காட் மூலம் மெகா ஜவுளி மண்டல திட்டம் – முதல்வர் கோரிக்கை!
தமிழகத்தில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டல திட்டத்தை சிப்காட் மூலம் செயல்படுத்த அனுமதி வேண்டி கோரிக்கை விடுத்தார். இது தொடர்பாக பிரதமருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
ஜவுளி மண்டலம்:
இந்தியாவில் ஜவுளித் துறையை மேம்படுத்தும் விதமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் பிரதமரின் மித்ரா திட்டத்தின் கீழ் உத்திர பிரதேசம், தெலுங்கானா, கர்நாடகா, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, குஜராத், மத்திய பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.
பொதுமக்களுக்கான வருமானத்துறை எச்சரிக்கை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
அதன்படி தற்போது தமிழகத்தில் மெகா ஜவுளிப் பூங்கா அமைக்க விருதுநகர் மாவட்டம் இ.குமாரலிங்கபுரம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்கு தமிழக முதல்வர் நன்றி தெரிவிக்கும் வகையில் பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதில் மெகா ஜவுளிப் பூங்கா தமிழகத்தில் விருதுநகர் தேர்வு செய்யப்பட்டதற்கு நன்றி தெரிவித்தார். மேலும் தமிழ்நாட்டில் பிரதமரின் ஒருங்கிணைந்த ஜவுளி மண்டலம் மற்றும் ஆடைப் பூங்காவை சிப்காட் நிறுவனத்தின் மூலம் செயல்படுத்திட அனுமதி அளிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.