பொதுமக்களுக்கான வருமானத்துறை எச்சரிக்கை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
ஆதார் கார்டினை பான் கார்டுடன் இணைக்க வரும் மார்ச் 31 ஆம் தேதி வரைக்கும் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், இந்த குறிப்பிட்ட தேதிக்குள் இணைக்கவில்லையெனில் பான் கார்டு செல்லாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆதார் – பான்:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனின் அடையாளமாக ஆதார் கார்டு விளங்கி வருகிறது. அது மட்டுமல்லாமல் அரசின் அனைத்து நல திட்டங்களை பெறுவதற்கும் ஆதார் கார்டு இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. இந்த ஆதார் கார்டினை பான் கார்டுடன் இணைப்பது கட்டாயமாகும். அதாவது, வருமான வரித்துறையின் பல்வேறு மோசடிகள் ஏற்படுவதால் ஆதார் கார்டுடன் பான் கார்டை இணைப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் குடிமக்களுக்கு ஆதார் கார்டினை பான் கார்டுடன் இணைக்க கால அவகாசம் வழங்கப்பட்டு வருகிறது. தற்போதும் மார்ச் 31 ஆம் தேதி வரைக்கும் ஆதாருடன் பான் கார்டினை இணைக்க அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. மேலும், ஆதார் கார்டினை பான் கார்டுடன் இணைக்க நினைப்பவர்கள் https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/bl-link-aadhaar என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று இணைத்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.