அரசு அலுவலகங்களில் டிக் டாக் பயன்படுத்த தடை – முக்கிய அறிவிப்பு வெளியீடு!!
இங்கிலாந்து அரசு அலுவலகங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
டிக் டாக் தடை
பிரபல சமூக ஊடகத் தளமான டிக் டாக் செயலி கடந்த 2016 ஆம் ஆண்டு சீனாவில் அறிமுகம் செய்யப்பட்டது. வியாபார ரீதியில் துவங்கப்பட்ட இந்த டிக் டாக் செயலி பயனர்களுக்கு பல்வேறு ஸ்வாரசியமான அம்சங்களை வழங்கியது. இந்த சுதந்திரம் தவறாக பயன்படுத்தப்படுவதாகவும், மக்களின் தனியுரிமை பாதிக்கப்படுவதாகவும் எழுந்த குற்றசாட்டுகளை அடுத்து பல்வேறு நாடுகளில் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டது.
Follow our Twitter Page for More Latest News Updates
உலகின் தலை சிறந்த விமான நிலைய பட்டியலில் இணைந்த சிங்கப்பூர் ஏர்போர்ட்!!
அந்த வகையில், இந்தியா, அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், தற்போது இங்கிலாந்து அரசாங்கமும் இணைந்துள்ளது. அதாவது, இங்கிலாந்து அரசு அலுவலகங்களில் பணியாற்றுபவர்கள் அரசு சாதனங்களில் டிக் டாக் செயலியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. அதே போல, பெல்ஜியம் அரசாங்கமும் டிக் டாக் செயலியை பயன்படுத்துவதற்கு தடை விதித்துள்ளது.