இந்தியாவில் வேகமாக பரவும் இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் – இருவர் பலி! ஷாக் ரிப்போர்ட்!
இந்தியாவில் கடந்த சில நாட்களாக பலர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கு இன்ஃப்ளூயன்ஸா H3N2 வைரஸ் காரணம் என தெரிவித்துள்ள நிலையில் அதனால் இருவர் உயிரிழந்து இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
காய்ச்சல் பாதிப்பு
நாடு முழுவதும் பருவநிலை மாற்றத்தால் பலர் காய்ச்சல் பாதிப்பால் அவதி அடைந்து வருகின்றனர். இந்நிலையில் இந்தியாவில் இன்ஃப்ளூயன்ஸா H3N2 மற்றும் H1N1 தொற்றுகள் பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. மேலும் இந்த வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் காய்ச்சல், சளி, இருமல், மூச்சுத் திணறல் போன்ற அறிகுறிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த இரண்டு மூன்று மாதங்களாக பரவி வரும் இந்த வைரஸால் பாதிக்கப்படுபவர்கள் பலர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு சுவாச நோய்கள் ஏற்படுத்தும் வைரஸ்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது
இனி ஒரே ஜாலிதான் .. தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிக்கை!
மேலும் இந்த வைரஸ் பொதுவாக 50 வயதிற்கு மேற்பட்டவர்களையும், 15 வயதிற்கு கீழ் உள்ளவர்களை அதிகம் தாக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுவாச பிரச்சனையை ஏற்படுத்தும் இந்த நோய் பாதிப்பு காற்று மாசுபாடு காரணமாக ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த வைரஸ் காரணமாக ஹரியானாவில் ஒருவர், கர்நாடகாவில் ஒருவர் என இருவர் உயிரிழந்து இருப்பதாகவும், நாடு முழுவதும் சுமார் 90 பேருக்கு இந்த வைரஸ் பாதிப்பு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.