12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவரா? ரூ.10,592/- சம்பளத்தில் தமிழக அரசு வேலை!
நாகப்பட்டினம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் காலியாக உள்ள Outreach Officer பதவிக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 08-03-2023 அன்று அல்லது அதற்கு முன் ஆஃப்லைனில் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு |
பணியின் பெயர் | புறத்தொடர்பு பணியாளர் |
பணியிடங்கள் | 01 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.03.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு காலிப்பணியிடங்கள்:
Outreach Officer பதவிக்கு என ஒரு பணியிடம் காலியாக உள்ளது.
Officer பணிக்கான வயது வரம்பு:
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு பிரிவு நாகப்பட்டினம் ஆட்சேர்ப்பு அறிவிப்பின்படி, விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 40 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
IOCL நிறுவனத்தில் 500+காலிப்பணியிடங்கள் – Diploma தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்!
கல்வி தகுதி:
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களிலில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, நல்ல தகவல் தொடர்பு திறன் மற்றும் களப்பணியில் அனுபவமுள்ள விண்ணப்பதாரர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Outreach Officer சம்பள விவரம்:
மேற்கண்ட பணிக்கு தேர்வு செய்யப்படும் தேர்வர்க்கு மாதம் ரூ.10,592/- தொகுப்பூதியமாக வழங்கப்பட உள்ளது.
விண்ணப்பிக்கும் முறை:
தகுதியும் திறமையும் உள்ள ஆர்வமுள்ளவர்கள் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம், அறை எண்.209, இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நாகப்பட்டினம் – 611003 என்ற முகவரிக்கு 08.03.2023 அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்பி விண்ணப்பிக்க வேண்டும்.