தமிழகத்தில் 5 நகரங்கள் மத்திய அரசின் திட்டத்திற்கு தேர்வு – முழு விபரம் உள்ளே!
இந்தியாவில் சிறந்த பாதுகாப்பு உற்பத்தி சூழல் அமைப்பதற்கு பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசின் இந்த திட்டத்தை செயல்படுத்த தமிழகத்தில் 5 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு:
தற்சார்பு இந்தியா என்ற இலக்கை அடைவதற்கும், நாட்டில் உற்பத்தி பணியை அதிகப்படுத்துவதற்கும் மத்திய அரசு பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த திட்டத்தை நாட்டில் பல்வேறு மாநிலங்களில் செயல்படுத்த உள்ளது. அதன்படி தற்போது இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான சிறப்பான நகரங்களை தேர்வு செய்யும் பணியில் இறங்கியுள்ளது.
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த நிலையில், தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தை செயல்படுத்த 5 நகரங்களை மத்திய அரசு தேர்வு செய்துள்ளது. அதன்படி சென்னை, ஓசூர், கோவை, திருச்சி, சேலம் ஆகிய நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து நிலத்தை தேர்வு செய்வதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
தமிழகத்தில் பிப்.8ம் தேதி ‘இந்த’ பகுதிகளில் மின்தடை? – அதிகாரப்பூர்வ பட்டியல் வெளியீடு!
மேலும், தமிழகத்தில் பாதுகாப்பு தொழில் கட்டமைப்பு திட்டத்தின் கீழ் , பல்வேறு நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படும். அத்துடன் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு அதிகமான வேலைவாய்ப்பு கிடைக்கும் என்று கூறப்படுகிறது.