மாதம் ரூ.300 வாடகையில் தங்குமிடம்.. சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் அரசின் அதிரடி சலுகை!!
ராஜஸ்தான் மாநிலத்தில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு பல சலுகைகளை அரசு அறிவித்து வருகிறது. அந்த வகையில் மாதம் ரூ.300 வாடகையில் அரசு தங்குமிடத்தை வழங்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
அரசு அறிவிப்பு:
கர்நாடகா, தெலுங்கானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட ஒன்பது மாநிலங்களுக்கான சட்டசபை தேர்தல் பணிகள் இந்த ஆண்டு நடைபெற இருக்கிறது. இந்நிலையில் பல மாநிலங்களில் அதற்கான பணிகள் முழு வீச்சுடன் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு ராஜஸ்தான் அரசு மக்களுக்கு பல சலுகைகளை வழங்கி வருகிறது. அதில் ஒன்றாக மாதம் ரூ.300 வாடகையில் அரசு தங்குமிடத்தை வழங்க ராஜஸ்தான் அரசு முடிவு செய்துள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதற்காக குத்தகைதாரருக்கும் அரசுக்கும் இடையே வாடகை ஒப்பந்தம் தயாரிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குத்தகைதாரர் அந்தச் சொத்தின் உரிமையாளராகி, நிலுவைத் தொகையை மட்டுமே செலுத்த வேண்டும் என்ற வாடகை ஒப்பந்தத்தில் நிபந்தனைகள் சேர்க்கப்பட்டுள்ளது. இந்த சலுகையை பெற சில விதிமுறைகள் இருக்கின்றன. அதன் படி ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்துக்கும் குறைவாக உள்ள அனைத்து குடும்பங்களும் இத்திட்டத்தில் சேரலாம் என நகர்ப்புற மற்றும் வீட்டு வசதித் துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.
பான் கார்டு வைத்துள்ளவர்கள் கவனத்திற்கு – ஆதாரை இணைக்க மார்ச் 31 கடைசி நாள்.. தவறினால் சிக்கல்!!
ராஜஸ்தானில் ஆவாசன் மண்டல் யோஜனா திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட பல வீடுகள் பல ஆண்டுகளாக காலியாக இருப்பதாகவும், இந்த திட்டத்தின் மூலம் அவற்றைப் பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்துள்ளார். மேலும் அஜ்மீர், அல்வார், ஜெய்ப்பூர், ஜோத்பூர், உதய்பூர், கோட்டா உள்ளிட்ட மாநிலத்தின் பல மாவட்டங்களில், பல வீடுகள் பல ஆண்டுகளாக காலியாக இருப்பதால் அதனை பயன்படுத்த அரசு திட்டமிட்டு வருகிறது. முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வீடுகள் வழங்கப்படும் என அரசு வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.