தமிழகத்தில் முதியோர் உதவித்தொகை பெற கட்டுப்பாடு நீக்கம் – மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது ஆதரவற்ற முதியோர்களுக்கு வழங்கப்படும் உதவித்தொகை பெற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. இந்நிலையில் தற்போது திமுக ஆட்சியில் அந்த கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு அனைவருக்கும் உதவித்தொகை வழங்கப்படும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்
உதவித்தொகை கட்டுப்பாடுகள்:
தமிழகத்தில் முதியோருக்கு அரசு சார்பில் உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆட்சியில் முதியோர் உதவித்தொகை பெற சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. அதன் படி ஆண் வாரிசு இருக்கும் முதியோர்களுக்கு உதவித்தொகை வழங்கப்படமாட்டாது எனவும், இதன் காரணமாக ஏழரை லட்சம் பேருக்கு முதியோர் உதவித்தொகை, மாற்றுத் திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவி தொகை நிறுத்தப்பட்டது.
37 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் கணக்கு முடக்கம் – வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!!
இது குறித்து ஈரோடு கிழக்குத் தொகுதி தேர்தல் பிரச்சாரத்தின் போது மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் விளக்கம் கொடுத்துள்ளார். அதில் முதியோர் உதவித்தொகைக்கான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு, அனைவருக்கும் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் ஆண் வாரிசு இருந்தாலும், ஆதரவற்றவர்களாக இருந்தால் உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஏற்கனவே உதவித்தொகை வாங்கிக் கொண்டிருந்தவர்களுக்கும், நிறுத்தப்பட்டவர்களுக்கும் அனைத்து வருவாய் அலுவலகங்களிலும் கணக்கெடுக்கப்பட்டு உதவி தொகை வழங்கப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார். மேலும் இந்த ஆட்சியில் திட்டங்களும், முதலமைச்சரின் பணிகள் குறித்தும் பேசி மக்களிடம் வாக்கு சேகரித்தார்.