37 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் கணக்கு முடக்கம் – வாட்ஸ் அப் நிறுவனம் அதிரடி நடவடிக்கை!!
உலகின் முன்னணி நிறுவனமான வாட்ஸ் அப் விதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக கூறி கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் 37 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்தியர்களின் கணக்குகளை முடக்கியுள்ளது. இதில் சில கணக்குகள் முன்னறிவிப்பின்றி முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்:
உலக அளவில் அதிக மக்களால் பயன்படுத்தப்படும் வாட்ஸ் அப் தனது பயனர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தற்போது வழங்கி வருகிறது. ஆரம்பத்தில் மெசேஜிங் தளமாக மட்டும் இருந்து வந்த வாட்ஸ் அப் தற்போது தொழில் துறையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வப்போது புதிய அப்டேட்களையும் வெளியிட்டு வருகிறது.
தமிழகத்தில் பிப்.6 மின்தடை அறிவிப்பு – மின்வாரிய எச்சரிக்கை!
Follow our Instagram for more Latest Updates
அன்றாட வாழ்வின் முக்கிய இடத்தைப் பிடித்துள்ள வாட்ஸ் அப்பை பயன்படுத்தி சிலர் தவறான செயல்களையும் செய்து வருகின்றனர் அப்படி செய்பவர்களின் கணக்குகளை முடக்கும் பணியில் வாட்ஸ் அப் இறங்கியுள்ளது. இந்த நிலையில் விதிகள் மற்றும் நிபந்தனைகளை மீறியதாக 2022 ம் ஆண்டு டிசம்பர் மாதம் மட்டும் சுமார் 36 லட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய பயனர்களின் கணக்கை வாட்ஸ் அப் முடக்கியுள்ளது.
இதில் 13,89,000 வாட்ஸ் அப் கணக்குகள் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி முடக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த எண்ணிக்கை கடந்த 2022 நவம்பர் மாதத்தை ஒப்பிடுகையில் மிகவும் குறைவு என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.