மாற்றப்பட்ட விலை பட்டியல்.. பால் விலை லிட்டருக்கு ரூ. 3 உயர்வு – அதிர்ச்சியில் Amul வாடிக்கையாளர்கள்!!
குஜராத் மாநில பால் கூட்டு நிறுவனமான அமுல் பாலின் விலையை உயர்த்த உள்ளதாக அறிவித்துள்ளது. புதிய பால் நிர்ணய விலை பட்டியலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த விலை உயர்வு பொதுமக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பால் விலை:
இந்தியாவில் மக்களின் அத்தியாவசிய பொருட்களில் ஒன்றான பாலின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. அரசு நிறுவனங்களும் தனியார் பால் நிறுவனங்களும் போட்டி போட்டுக் கொண்டு விலையை உயர்த்தி வருவதால் சாமானிய மக்கள் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மற்ற நிறுவனத்தை தொடர்ந்து தற்போது குஜராத் பால் கூட்டுறவு நிறுவனமான அமுல் இன்று (பிப் .03) முதல் பால் விலையை லிட்டருக்கு ரூ.3 உயர்த்தியுள்ளது.
பகுதி நேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்ய கோரி போராட்டம் – பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பேட்டி!!
Follow our Instagram for more Latest Updates
இதனையடுத்து பசும்பால் லிட்டருக்கு ரூபாய் 56 ஆகவும் அமுல் தாசா பால் லிட்டருக்கு ரூ. 54 ஆகவும் அமல் எருமை பால் லிட்டருக்கு ரூ. 70 ஆகவும் விற்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதற்குரிய அதிகாரபூர்வ விலை பட்டியலும் வெளியாகி உள்ளது. ஏற்கனவே அமுல் நிறுவனம் கடந்த வருடம் அக்டோபர் மாதம் பால் விலையை லிட்டருக்கு ரூ. 2 உயர்த்தியது. மூன்று மாதங்களில் மீண்டும் பால் விலை உயர்த்தி உள்ளதால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
பால் விலை அதிகரிப்பை தொடர்ந்து பால் பொருட்களின் விலையும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது கால்நடை தீவனத்திற்கு ஆகும் செலவுகள் மற்றும் பால் உற்பத்தி அதிகரிப்பு போன்றவற்றின் காரணமாகவே இந்த விலை உயர்வு செய்யப்பட்டுள்ளதாக அமுல் நிறுவனம் தெரிவித்துள்ளது.