தமிழகத்தில் இன்று (பிப் 1) 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் தகவல்!
வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக இன்று தமிழகத்தில் டெல்டா உட்பட 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது
மழைக்கு வாய்ப்பு:
தமிழகத்தில் கடந்த 2 நாட்களாக பல மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் இலங்கையில் இன்று கரையை கடப்பதால் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரை கண்ணன் கூறுகையில், நேற்றைய நிலவரப்படி பகல்11.30 மணி நிலவரப்படி, இலங்கையின் திரிகோணமலையில் இருந்து கிழக்கே சுமார் 290 கி.மீ தொலைவிலும், காரைக்காலில் இருந்து கிழக்கு – தென்கிழக்கே சுமார் 510 கி.மீ. தொலைவிலும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலைகொண்டிருந்தது.
340 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம் – அதிர்ச்சி தகவல்!!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அது இன்று இலங்கையில் கரையை கடக்கக் கூடும் என தெரிவித்துள்ளார். அதன் காரணமாக இன்று (பிப். 1)கடலோர மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களிலும், உள் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.