340 ஊழியர்களை பணிநீக்கம் செய்த பிரபல நிறுவனம் – அதிர்ச்சி தகவல்!!
முன்னணி சிப் தயாரிப்பாளரான இன்டெல் நிறுவனம் சுமார் 340 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களையும் இப்பதிவில் காணலாம்.
பணிநீக்க அறிவிப்பு
கூகுள், மெட்டா, மைக்ரோசாப்ட் மற்றும் ட்விட்டர் போன்ற பல தொழில்நுட்ப நிறுவனங்களில் மேற்கொள்ளப்பட்ட மாஸ் பணிநீக்கங்கள் வரலாற்றில் முதல் முறையாகும். இந்த நிறுவனங்களை முன் வைத்து, பல்வேறு துறைகளை சேர்ந்த நிறுவனங்கள் தொடர்ச்சியான பணிநீக்கங்களில் ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு கார்ப்பரேஷன் மற்றும் தொழில்நுட்ப நிறுவனமான இன்டெல், பணிநீக்கம் குறித்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
15 ஆண்டுகள் பழமையான வாகனத்திற்கு தடை – மத்திய அமைச்சர் தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
மாறி வரும் பொருளாதார சூழ்நிலைகளை கையாளும் விதமாக இன்டெல் நிறுவனம் சுமார் 340 ஊழியர்களை பணிநீக்கம் செய்வதாக அறிவித்துள்ளது. இந்த திடீர் பணிநீக்கம் மூலம் பாதிக்கப்பட்ட ஊழியர்களுக்கு 60 நாட்கள் நோட்டீஸ் காலம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக, கடந்த வாரத்தில் மைக்ரோசாப்ட், ஸ்பாட்டிபை, IBM, பிலிப்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் நூற்றுக்கணக்கான ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது. இதை தொடர்ந்து தற்போது இன்டெல் நிறுவனமும் இந்த பட்டியலில் இணைந்துள்ளது.
Exams Daily Mobile App Download