சென்னையில் மழைநீர் வடிகால் பணிகள் தீவிரம் – முதல்வர் நேரில் சென்று ஆய்வு!
சென்னையில் நடைபெறும் மழைநீர் வடிகால் பணிகளை முதல்வர் மு. க. ஸ்டாலின் நேரில் சென்று ஆய்விட்டுள்ளார்.
முதல்வர் ஆய்வு:
சென்னையில் கடந்த ஆண்டுகளில் பெய்த கனமழையின் காரணமாக மொத்தம் நகரமும் வெள்ளத்தினால் சூழப்பட்டது. இதனால் பொதுமக்கலின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகினர். எனவே இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கு இடையூறில்லா வண்ணம் மழை நீர் வடிகால் அமைக்க திட்டம் மேற்கொள்ளப்பட்டது. இத்திட்டத்தின் மூலம் கனமழை காலங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்றும், நாளையும் வங்க கடலில் சூறாவளிக்காற்று வீசும்.. மீனவர்களுக்கு வார்னிங் – வானிலை அறிக்கை!
Telegram Updates for Latest Jobs & News – Join Now
தற்போது மழைநீர் வடிகால் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில் ஆதம்பாக்கம், மணப்பாக்கம், கிங் மருத்துவமனை ஆகிய இடங்களில் நடைபெற்று வரும் பணிகளை ஆய்வு செய்த முதல்வர் சிட்டி லிங்க் சாலை, நேதாஜி சாலை, ஐந்து பர்லாங் சாலை ஆகிய பகுதிகளிலும் நடைபெற்று வரும் பணிகளையும் ஆய்வு செய்துள்ளார். ஆய்வின்போது முதல்வருடன் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், துணை மேயர் மகேஷ் குமார், ஆணையர் ககன்தீப் சிங் பேடி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கலந்துகொண்டனர்.