வருமான வரி விலக்கு பெற வேண்டுமா? இதற்கான சிறந்த வழிகள் இதோ!
2022-2023 நிதியாண்டு முடிவடைய இருப்பதால் வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய வேண்டியிருக்கும். இந்த நிலையில் நீங்கள் வருமான வரியில் கூடுதலான விலக்குகளைப் பெற வேண்டுமா? இதற்கான வழிமுறைகள் குறித்து விரிவாக பார்ப்போம்.
வருமான வரி விலக்கு:
நடப்பு (2022-2023) நிதியாண்டு முடிவடைய இருப்பதால் FY23-க்கான வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். உங்களின் வருமானத்தில் கூடுதலான வரி விலக்கு பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளது. இப்போது உங்களுக்கு வீட்டு வாடகை அலவன்ஸ் கிடைத்தால் இதற்கு வரி செலுத்த தேவையில்லை. அதாவது மொத்த வருமான வரியில் இருந்து HRA தொகை கழிக்கப்படும்.
தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இதே போல், ஊழியர்களின் குழந்தைகளின் படிப்பிற்கு அலவன்ஸ்கள் மற்றும் கல்விக் கட்டணங்களுக்கும் வரி விலக்கு அளிக்கப்படுகிறது. அதன்படி கல்விக்கான அலவன்ஸ்களின் கீழ், 2 குழந்தைகளுக்கு வரி விலக்கு பெறலாம். அதாவது 80சி பிரிவின் கீழ் குழந்தைகளின் கல்விக் கட்டணத்திற்கு ரூ.1.5 லட்சம் வரை வரி விலக்கு அளிக்கப்படுகிறது. மேலும் பொது வருங்கால வைப்பு நிதி மற்றும் தேசிய ஓய்வூதியத் திட்டம் ஆகிய திட்டங்களில் முதலீடு செய்வதாலும் வருமான வரி விலக்கு கிடைக்கும்.
இதையடுத்து நீங்கள் புத்தகங்களுக்காக செலவு செய்தாலும் புத்தகங்கள் மற்றும் பருவ இதழ்கள் அலவன்ஸ்கள் கீழ் வரி விலக்கு கிடைக்கும். இதுமட்டுமல்லாமல், இந்தியாவிற்குள் ஒரு பயணத்திற்கு முன்பதிவு செய்த டிக்கெட்டுகளுக்கான செலவுகளுக்கும் வரி விலக்கு பெறலாம். மேலும் தனியார் நிறுவனங்கள் மற்றும் அரசு நிறுவனங்கள் இரண்டும் தங்கள் ஊழியர்களை வேறு ஊர்களுக்கு பணியமர்த்தும் போது, அந்த ஊழியரின் தங்குமிடம்/ரயில்/விமான டிக்கெட்டுகள்/போக்குவரத்து செலவுகள் ஆகிய செலவுகளை நிறுவனங்கள் செலுத்துகின்றன. இந்த செலவுகளுக்கு வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும்.