தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி – விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு!
தமிழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிக்கு ஆன்லைன் விண்ணப்பபதிவுகள் தற்போது நடைபெற்று வருகிறது. விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரிக்கை எழுந்து வந்த நிலையில் தற்போது முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கால அவகாசம் நீட்டிப்பு:
தமிழகத்தில் மண்டல மற்றும் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. இந்த போட்டியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் அரசு ஊழியர்கள் மாற்றுத்திறனாளிகள் என அனைவரும் பங்கேற்கலாம். இப்போட்டியில் பங்கேற்க பொது பிரிவினருக்கு வயது வரம்பு 15 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தனிநபர் தகவல்கள் திருடுவதை தடுக்க புதிய ஏங்குதளம் – IIT நிறுவனம் வெளியிட்ட சூப்பரான தகவல்!!
Follow our Instagram for more Latest Updates
மாற்றுத்திறனாளிகள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு வயது வரம்பு கிடையாது. கபடி, சிலம்பம் , தடகளம் கூடைப்பந்து, கால்பந்து, டேபிள் டென்னிஸ் உள்ளிட்ட 15 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படும் இந்த போட்டிகளில் பங்கேற்று முதல்வர் கோப்பை பெற விரும்புபவர்கள் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பதற்கான கால அவகாசத்தை நீட்டிக்க கோரி பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை கருத்தில் கொண்டு முதல்வர் கோப்பை காண போட்டிக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கோப்பைக்கான போட்டிகளுக்கு ஜனவரி 23 வரை விண்ணப்பிக்கலாம் என விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.