மத்திய அரசின் புதிய மின்சார திருத்த சட்டம் – வலுக்கும் எதிர்ப்புகள்!
இந்தியாவில் மத்திய அரசு புதிய மின்சார திருத்தச்சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின் மூலம் மின் வாரிய செலவினங்களை மக்களிடம் வசூலிக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதனால் புதிய சட்டத்திற்கு தற்போது கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளது.
மின்சார திருத்த சட்டம்:
தமிழகத்தில் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்கு பிறகு மின் கட்டணம் கடந்த செப்டம்பர் மாதம் அதிரடியாக உயர்த்தபட்டது. கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது. இதனால் சாமானிய மக்கள் பொருளாதார நெருக்கடி நிலைக்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் மத்திய அரசு புதிய மின்சார திருத்தச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த சட்டத்தின் படி அனைத்து மாநில அரசுகளும் மின் வாரியத்துக்கு ஏற்படும் கூடுதல் செலவினங்களை மின் நுகர்வோர்களிடம் இருந்து வசூலித்துக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அதே போல மின்சாரம் தயாரிப்பதற்கு வாங்கும் நிலக்கரி உள்ளிட்ட செலவினங்களை பொதுமக்களிடம் இருந்து வசூலிக்கலாம் என்று மின்சார திருத்த சட்ட விதி 14 பரிந்துரை செய்துள்ளது.
சனிக்கிழமை (ஜன.21) தமிழகத்தின் முக்கிய பகுதிகளில் மின்தடை – பராமரிப்பு பணிகள் எதிரொலி!
மேற்சொன்ன செலவுகளை மின் பயனர்களிடமிருந்து மதத்தோறும் வசூலிக்க முடியாத சூழலில் ஆண்டுக்கு ஒரு முறை வசூலிக்கவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த சட்டத்திற்கு பொதுமக்களும், கட்சி தலைவர்கள் மத்தியிலும் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.