தமிழகத்தில் 3184 காவலர்களுக்கு சிறப்பு பதக்கங்கள் – முதல்வரின் ஆணை!
தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழக காவல்துறையினர்களுக்கு சிறப்பு பொங்கல் பதக்கங்கள் மற்றும் அதற்கான பரிசுகளை வழங்குவதற்கு ஆணை வெளியிட்டுள்ளார்.
பொங்கல் பதக்கங்கள்:
தமிழக அரசு ஆண்டுதோறும் அரசின் காவல் படைகளில் உள்ள சிறப்பு பணியாற்றும் வீரர்களுக்கு அவர்களின் பணியினை அங்கீகரிக்கும் விதமாக ஊக்க பரிசுகளை வழங்கி வருகிறது. அதன்படி நடப்பு ஆண்டு பொங்கல் பண்டிகையை ஒட்டி ‘தமிழக முதலமைச்சரின் காவல் பதக்கங்கள்’ என்ற விழாவினை நடத்த உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ளார்.
முதல்வர் வெளியிட்டுள்ள ஆணையில், சிறைகள் மற்றும் சீர்திருத்த பணிகள் துறைகள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறை காவல் துறை போன்ற பணிகளில் உள்ள வீரர்கள் பொது நலனை மேம்படுத்தும் விதமாக செயல்பட்டதை பாராட்டும் வகையில் இப்பதக்கங்கள் அளிக்கப்படுகிறது. அதன்படி நடப்பாண்டு 3,000 பணியாளர்களுக்கு இவ்விருதுகள் அளிக்க உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார். வீரர்களுக்கு அவர்களின் பணி நிலையை பொறுத்து பரிசுகள் அளிக்கப்படுகிறது.
தமிழக ரேஷன் கார்டுதாரர்கள் கவனத்திற்கு – வெளியான ஹாப்பி நியூஸ்!!
இதேபோல் நாய் படை பிரிவு மற்றும் காவல் புகைப்பட கலைஞர்கள் பிரிவு போன்ற துறைகளில் பணியாற்றும் அதிகாரிகளுக்கு அவர்களின் சிறப்பு பணிகளை ஊக்குவிக்கும் விதமாக தமிழக முதலமைச்சரின் ‘காவல் தொழில்நுட்ப சிறப்பு பணி பதக்கம்’ என்ற விருதுகள் வழங்கப்பட உள்ளது.