திருப்பதி கோவில் சொர்க்கவாசல் தரிசனம் – பக்தர்களுக்கு முக்கிய அறிவிப்பு!!
திருமலை திருப்பதி கோவிலில் பக்தர்களுக்கான சொர்க்கவாசல் தரிசனம் நாளையுடன் (ஜன.11) நிறைவடைவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து பக்தர்களுக்கு இலவச டோக்கன்கள் வழங்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சொர்க்கவாசல் தரிசனம்
திருமலை திருப்பதியில் அமைந்துள்ள ஏழுமலையான் கோவில் இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற புனிதத்தலங்களில் ஒன்றாகும். இந்த கோவிலுக்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு. அந்த வகையில் திருமலை திருப்பதி கோவிலில் சொர்க்கவாசல் தரிசனத்திற்கான நடை ஜனவரி 2 ஆம் தேதியன்று திறக்கப்பட்டது. இதையடுத்து, பக்தர்கள் பலரும் திருப்பதிக்கு சென்று சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
மீண்டும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கம் – ஜனவரி 19 இல் பிரதமர் மோடி துவக்கி வைப்பு!!
Follow our Twitter Page for More Latest News Updates
இந்த நிலையில் திருமலை திருப்பதி கோவிலில் சொர்க்கவாசல் தரிசனம் நாளை நிறைவடைய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை நள்ளிரவு 12 மணி வரை சுமார் 300 ரூபாய் கட்டணம் செலுத்தி, பக்தர்கள் சொர்க்கவாசல் தரிசனத்தை பெறலாம். இதை தொடர்ந்து, ஜனவரி 12 ஆம் தேதி முதல் பக்தர்களுக்கான இலவச டோக்கன்களை வழங்க தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.