மீண்டும் வந்தே பாரத் ரயில் சேவை இயக்கம் – ஜனவரி 19 இல் பிரதமர் மோடி துவக்கி வைப்பு!!
மத்திய அரசின் ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகள் 8 ஆவது முறையாக மீண்டும் துவங்க இருக்கிறது. இந்த சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19 ஆம் தேதியன்று துவக்கி வைக்க இருக்கிறார்.
ரயில் சேவை
மத்திய ரயில்வே வாரியம், பயணிகளுக்கு ஏற்ற வகையில் குறைந்த நேர பயண சேவைக்கான பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட ‘வந்தே பாரத்’ ரயில் சேவை மக்களிடம் இருந்து வரவேற்புகளை பெற்று வருகிறது. இதன் காரணமாக இந்தியா முழுவதும் ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகள் சுமார் 7 வழித்தடங்களில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில்கள் மணிக்கு 180 கிமீ வரை செல்லும் திறன் கொண்டது.
ஜனவரி 16 ஆம் தேதி மதுபானக்கடைகள் அடைப்பு – புதுச்சேரி அரசு உத்தரவு!!
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், 8 ஆவது முறையாக ‘வந்தே பாரத்’ சேவைகள் மீண்டும் துவங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஆந்திரா மாநிலம் விஜயவாடா மற்றும் தெலுங்கானா மாநிலம் செக்கந்திராபாத் பகுதிகளுக்கு இடையே ‘வந்தே பாரத்’ சேவைகளை இயக்க தெற்கு ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இந்த சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி ஜனவரி 19 ஆம் தேதியன்று துவக்கி வைக்க இருக்கிறார். இதற்கு முன்னதாக தெற்கு ரயில்வே நிர்வாகம், சென்னை சென்ட்ரல் முதல் கர்நாடகா மாநிலம் வரை ‘வந்தே பாரத்’ ரயில் சேவைகளை செயல்படுத்தி வருகிறது குறிப்பிடத்தக்கது.