வேலை நிறுத்த போராட்டத்தில் தமிழக மின் ஊழியர்கள் – நீதிமன்றம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!
தமிழக மின்வாரிய ஊழியர்கள் அழைப்பு விடுத்துள்ள வேலை நிறுத்த போராட்டத்திற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் நீதிமன்றம் முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
போராட்டத்திற்கு தடை:
தமிழக மின்வாரிய ஊழியர்கள் ஊதிய உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜன.10ம் தேதி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இந்த போராட்டத்திற்கு அனைத்து மின்வாரிய ஊழியர்களுக்கும் அழைப்பும் விடுத்தனர். இது குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக ஊழியர் சங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு – மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை!
இந்த வேலை நிறுத்த போராட்டத்தால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுவர் என்பதை கருத்தில் கொண்டு சென்னையை சேர்ந்த சரவணன், ஏழுமலை என்பவர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தனர்.அவர்கள் அளித்த மனுவில் மின்வாரிய ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ள போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரினர்.
மேலும் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கையை குறித்து தற்போது TANGEDCO பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த நிலையில் போராட்டத்தை அறிவித்துள்ளது சட்டவிரோதமானது என்று குறிப்பிட்டனர். மேலும் பொங்கல் பண்டிகை வரவுள்ள இந்த நேரத்தில் போராட்டம் நடத்தினால் பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள் என்றனர். இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில், ஊழியர்கள் கோரிக்கை குறித்து பேச்சுவார்த்தை நடந்து வரும் நிலையில் வேலை நிறுத்த போராட்டத்திற்கு அழைப்பு விடுக்க முடியாது என கூறி சென்னை உயர் நீதிமன்றம் மின் வாரிய ஊழியர்கள் போராட்டத்திற்கு தடை விதித்தது.