தமிழக பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு – மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை!

0
தமிழக பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு - மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை!
தமிழக பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு - மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை!
தமிழக பள்ளிகளில் இடைநின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு – மீண்டும் படிப்பை தொடர நடவடிக்கை!

தமிழகத்தில் பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. தற்போது பள்ளி செல்லாமல் இடைநின்ற மாணவர்களை ஆசிரியர்கள் அவர்களின் வீடுகளுக்கே சென்று மீண்டும் பள்ளிக்கு வர வேண்டி கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

மாணவர்கள் கணக்கெடுப்பு:

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் அடுத்தடுத்த வகுப்புகளில் சரியாக சேர்ந்துள்ளனரா? என்பதை பள்ளி நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து பள்ளி ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல் இடை நின்ற மாணவர்களின் விவரங்களை ஆராய்ந்து வருகின்றனர்.

தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு அரசின் முக்கிய அறிவுரை – இதை கட்டாயமா செய்யுங்க!!

Follow our Instagram for more Latest Updates

தற்போது அனைத்து மாவட்டங்களிலும் பள்ளி செல்லா மற்றும் கல்வியை தொடராமல் இடைநின்ற மாணவர்களின் கணக்கெடுப்பு பணி தொடங்கியுள்ளது. இப்பணியானது வரும் 11ம் தேதி வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் உத்தரவின் பேரில் பள்ளி ஆசிரியர்கள் வீடு வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகளை கண்டறிந்து அவர்களை மீண்டும் பள்ளிக்கு வர வைத்து அவர்களுக்கு கல்வி கற்பிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இடைநிற்றலுக்கான காரணம் குறித்தும் கேட்டறிந்து வருகின்றனர். மற்ற மாவட்டங்களை தொடர்ந்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளி ஆசிரியர்கள் இடைநின்ற பள்ளி மாணவர்களின் வீடுகளுக்கு நேரடியாக சென்று அவர்கள் மீண்டும் படிப்பை தொடர வேண்டும் என்று பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

Exams Daily Mobile App Download

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!