புத்தாண்டு பரிசு: ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்கப்படும் – அமைச்சரவை முடிவு!!
டெல்லியில் நேற்று மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டுக்கு இலவச உணவு தானியங்கள் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இலவச அரிசி
இந்தியாவில் கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக ஏழை எளிய மக்களுக்கு உணவு தானியங்கள் இலவசமாக விலையின்றி வழங்கும் வகையில் உணவு தானியங்கள் வழங்கும் திட்டத்தை மத்திய அரசு கொண்டு வந்தது. மேலும் இத்திட்டத்தை டிசம்பர் மாதம் வரை நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில் நேற்று டெல்லியில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
Follow our Instagram for more Latest Updates
இந்த கூட்டத்தில் உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் அடுத்த ஓராண்டுக்கு ரேஷனில் அரிசி, கோதுமை இலவசமாக வழங்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உணவு அமைச்சர் கூறியிருப்பதாவது, உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் தற்போது ரேஷனில் மாதத்திற்கு 5 கிலோ அரிசி, கோதுமை முறையே ரூ.3 மற்றும் ரூ.5க்கு வழங்கப்படுகிறது.
நகைப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ் – ஆபரணத்தங்கத்தின் விலை அதிகரிப்பு.. இன்றைய நிலவரம் இதோ!
Exams Daily Mobile App Download
மேலும் அந்த்யோதயா அன்ன யோஜனா திட்டத்தின் கீழ் மாதந்தோறும் 35 கிலோ உணவு தானியங்களும் வழங்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, தற்போது புத்தாண்டு பரிசாக அடுத்த ஓராண்டுக்கு ரேஷனில் உணவு தானியங்களை இலவசமாக வழங்க அமைச்சரவையில் முடிவு செய்யப்பட்டு ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இதனால் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.2 லட்சம் கோடி வரை செலவினம் ஏற்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.