![புயலால் சேதமடைந்த படகுகள் - இழப்பீடு வழங்க கோரி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரை கிளையின் புதிய உத்தரவு! புயலால் சேதமடைந்த படகுகள் - இழப்பீடு வழங்க கோரி வழக்கு... உயர்நீதிமன்ற மதுரை கிளையின் புதிய உத்தரவு!](https://tamil.examsdaily.in/wp-content/uploads/2022/12/புயலால்-சேதமடைந்த-படகுகள்-இழப்பீடு-வழங்க-கோரி-வழக்கு.jpg)
புயலால் சேதமடைந்த படகுகள் – இழப்பீடு வழங்க கோரி வழக்கு… உயர்நீதிமன்ற மதுரை கிளையின் புதிய உத்தரவு!
தமிழகத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு ஏற்பட்ட கஜா புயலின்போது சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க கோரி வழக்கு தொடரப்பட்டது. இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் உயர்நீதிமன்ற மதுரை கிளை முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
இழப்பீடு தொகை:
வங்கக்கடலில் கடந்த 2018 ஆம் ஆண்டு உருவாகிய கஜா புயல் தமிழகத்தில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த புயலால் நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சென்னை உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டது. புயலின் வேகத்திற்கேற்ப வீசிய காற்றினால் மரங்கள் அடியோடு சாய்ந்து. அத்துடன் டெல்டா பகுதிகளில் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கியது.
Follow our Instagram for more Latest Updates
அதேபோல் மீனவர்களும் பெரும் இன்னல்களுக்கு ஆளாகினர். தங்களின் படகுகள் சேதமடைந்ததால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில் சேதமடைந்த படகுகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்று கூறி தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் தட்சிணாமூர்த்தி என்பவர்கள் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தனர்.
RRB Group D தேர்வர்களே.. தேர்வு முடிவுகள் இன்று வெளியீடு – சென்னை Region-க்கு எப்போது Result?
Exams Daily Mobile App Download
இன்று விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை தமிழக அரசுக்கு முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது எந்த நேரத்திலும் இயற்கை பேரிடர் ஏற்பட வாய்ப்புள்ள பகுதிகளில் அத்தகைய பேரிடரால் ஏற்படும் சேதங்களை அரசே ஏற்க வேண்டும் என்று உத்தரவிட்டது. மேலும் மனுதாரர்களுக்கு முறையாக 1.38 மற்றும் 1.33 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.