18 மாத கால அகவிலைப்படி நிலுவைத்தொகை எப்போது? – அரசு ஊழியர்கள் கோரிக்கை!
இந்தியாவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு நிலுவையில் உள்ள 18 மாத கால அகவிலைப்படி தற்போது வரை வழங்கப்படவில்லை. இதை வழங்க வலியுறுத்தி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
நிலுவைத்தொகை:
மத்திய அரசு ஊழியர்களுக்கு நடப்பு ஆண்டு 2-வது முறையாக கடந்த அக்டோபர் மாதம் அகவிலைப்படி 4 சதவீதம் உயர்த்தப்பட்டு 38 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால் ஏராளமான அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது உயர்த்தப்பட்டுள்ள அகவிலைப்படி 2022 ஜூலை மாதம் முதல் தேதியிட்டு வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிலையில் வரவிருக்கும் புத்தாண்டை முன்னிட்டு மேலும் அகவிலைப்படி உயர்த்தப்படலாம் என்று தகவல்கள் வந்துள்ளது. இதற்கு மத்தியில் ஊழியர்கள் 18 மாத காலமாக நிலுவையில் உள்ள அகவிலைபடியை வழங்க வலியுறுத்தி வருகின்றனர். கடந்த ஆண்டுகளில் நிலவிய கொரோனா பெருந்தொற்றின் காரணமாக மத்திய அரசு ஊழியர்களுக்கு திடீரென அகவிலைப்படி நிறுத்தி வைக்கப்பட்டது.
Exams Daily Mobile App Download
இந்த தொகையை தற்போது வழங்கும் படி ஊழியர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல முறை பேச்சுவார்த்தை நடத்தியும் மத்திய அரசு அகவிலைப்படி நிலுவை தொகையை வழங்க ஒப்புதல் அளிக்கவில்லை. நடப்பு ஆண்டு முடிவடைய உள்ள நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மீண்டும் 18 மாத அகவிலைப்படி தொகையை விடுவிக்க வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் பள்ளி & கல்லூரிகளுக்கு டிச.8, 9 விடுமுறை? மாண்டஸ் புயல் எதிரொலி!!
இதனையடுத்து அகவிலைப்படி நிலுவைத்தொகை குறித்து விவாதிக்க அமைச்சரவை, செயலாளர்களுடன் நேரம் ஒதுக்கியுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது. அதனால் விரைவில் மத்திய அரசு ஊழியர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி வரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வேளை அகவிலைப்படி நிலுவைத்தொகை வழங்க அரசு ஒப்புதல் அளித்தால் ஊழியர்களுக்கு சுமார் 2 லட்சம் வரை வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும்.