நாட்டின் இரண்டாம் கட்ட நகரங்களுக்கு வியாபாரத்தை நீடிக்கும் Flipkart Health+ – CEO தகவல்!
Flipkart நிறுவனம் வணிக தளத்தை போலவே, மருந்துகளுக்கான விற்பனையையும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் விரிவுப்படுத்த உள்ளதாக அதன் CEO பிரசாந்த் ஜாவேரி அறிவித்துள்ளார்.
Flipkart Health+:
Flipkart நிறுவனம் நாட்டின் முன்னணி ஆன்லைன் வணிக தளமாக செயல்பட்டு வருகிறது. ஆன்லைன் மூலமாக மக்களுக்கு தேவையான அனைத்து பொருட்களையும் நாட்டின் ஒவ்வொரு மூலை முடுக்கிற்கும் டெலிவரி செய்து வருகிறது. இந்நிலையில், கடந்த 2021ம் ஆண்டின் மருந்துகளை விற்பனை செய்யும் SastaSundar Marketplace என்ற நிறுவனத்தின் 75.1% பங்குகளை Flipkart கைப்பற்றியது.
தமிழகத்தில் டிச. 5 ‘ இந்த’ மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – இது தான் காரணம்!
Exams Daily Mobile App Download
அதன் பிறகு நிறுவனத்தின் பெயரை Flipkart Health+ என்று மாற்றி விட்டது. மேலும், ஏற்கனவே மருந்துகளை ஆன்லைனில் விற்பனை செய்யும் டாடாவின் 1m, ரிலையன்ஸின் Netmeds, அமேசான் பார்மசி போன்ற நிறுவனங்களுடன் நேரடியான வணிக போட்டியில் ஈடுபட்டுள்ளது. முன்னதாக நாட்டின் முன்னணி நகரங்களுக்கு மட்டுமே Flipkart Health+ சேவை அளித்து வந்த நிலையில், தற்போது நாட்டின் 2ம் அடுக்கு நகரங்கள் உட்பட நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் மருந்துகளை டெலிவரி செய்ய போவதாக அந்நிறுவனத்தின் CEO பிரசாந்த் ஜாவேரி அறிவித்துள்ளார்.