தமிழகத்தில் டிச. 5 ‘ இந்த’ மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை – இது தான் காரணம்!
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்துப்பேட்டையில் நடக்க உள்ள சந்தனக்கூடு விழாவிற்காக வரும் திங்கட்கிழமை அன்று மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
உள்ளூர் விடுமுறை:
தமிழகத்தில் குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் சிறப்பிக்கப்படும் பண்டிகைகள், திருவிழாக்கள், சிறப்பு தினங்கள் போன்ற நாட்களில் மாவட்ட நிர்வாகம் குறிப்பிட்ட மாவட்டத்திற்கு மட்டும் உள்ளூர் விடுமுறை அளித்து உத்தரவிடுகிறது. இந்நிலையில், திருவாரூர் மாவட்டத்தில் உள்ள முத்து பேட்டை ஜாம்பவான் ஓடை தர்காவில் ஆண்டுதோறும் கந்தூரி விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும்.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில், நடப்பு ஆண்டிற்கான முத்து பேட்டை ஜாம்புவான் ஓடை தர்காவின் கந்தூரி விழா தொடங்கியுள்ளது. மொத்தம் 14 நாட்கள் கொண்டாடப்படும் இந்த விழாவின் முக்கிய பகுதியான சந்தனக்கூடு டிசம்பர் 5ம் தேதி அன்று நடக்க உள்ளது. அதிக அளவிலான மக்கள் கலந்து கொள்ளும் இந்த விழா காரணமாக திருவாரூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 5ம் தேதியான திங்கட்கிழமை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார்.
600 நிர்வாகிகளை பணிநீக்கம் செய்த ஓயோ நிறுவனம் – அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
இதனால், வரும் திங்கட்கிழமை அம்மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் போன்ற அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது. இதற்கு பதிலாக டிசம்பர் 10ம் தேதியான அடுத்த சனிக்கிழமை பணி நாளாக செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.