வங்கியில் லஞ்சம் வாங்கிய உயர் அதிகாரி.. மாட்டிவிட்ட கண்ணன் – இன்றைய “பாண்டியன் ஸ்டோர்ஸ்” எபிசோட்!
விஜய் டிவி “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் அந்த முதியவருக்கு உதவி செய்வதாக சொல்லி லஞ்சம் வாங்கிய வங்கி அதிகாரியை மாட்டி விடுகிறார். பின் வீட்டில் முல்லையின் டிரீட்மென்ட்டை மீண்டும் தொடங்கலாம் என பேச ஆனால் கதிர் வேண்டாம் என சொல்கிறார்
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்று “பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியலில், கண்ணன் வங்கியில் லோன் கேட்டு வந்த முதியவரிடம் உயர் அதிகாரி லஞ்சம் கேட்கிறார். உடனே கண்ணன் லஞ்சம் கொடுப்பது போல கொடுக்க சொல்கிறார். கண்ணன் நான் இருக்கேன் தைரியமாக பண்ணுங்க என சொல்ல, உடனே முதியவர் லஞ்சம் கொடுக்க செல்கிறார். அப்போது கண்ணன் பயப்படாமல் செல்ல சொல்ல, அந்த முதியவரும் உள்ளே சென்று பணத்தை கொடுக்கிறார். அதை வாங்கிய அந்த மேடம் பணத்தை எண்ணி கொண்டிருக்க அப்போது கண்ணன் சொன்ன தகவலின்படி லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் வருகின்றனர்.
அவர்கள் அந்த உயர் அதிகாரியை கைது செய்து கூட்டி செல்கின்றனர். மேலும் கண்ணன் அந்த முதியவரிடம் நான் இருக்கேன் என கையை காட்ட. அதை பார்த்த அந்த மேடம், இப்போ வேலைக்கு வந்த உனக்கே இவ்வளவு இருந்தால் எனக்கு எவ்வளவு இருக்கும் என கேட்கிறார். மேலும் வங்கியில் இருப்பவர்கள் பாராட்டிவிட்டு கிளம்புகின்றனர். வீட்டில் பெண்கள் சமைத்து கொண்டிருக்க கண்ணன் இன்னும் வரவில்லையா என தனம் கேட்கிறார்.
ஐஸ்வர்யா போன் செய்ததாக சொல்ல, கண்ணன் வரவில்லை என்பதால் எல்லாரும் பதட்டம் அடைகின்றனர். அப்போது கதிர் ஜீவா கண்ணனை நான் தேடி செல்கின்றேன் என சொல்ல, ஆனால் அந்த நேரம் பார்த்து கண்ணன் வருகிறார். அவர் வங்கியில் செய்ததை பற்றி சொல்ல, நல்ல விஷயம் செய்திருப்பதாக குடும்பத்தில் இருப்பவர்கள் பாராட்டுகின்றனர். அப்போது தனம் மீண்டும் முல்லையின் டிரீட்மென்ட்டை தொடங்கலாம் என சொல்ல, ஆனால் கதிர் அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பணம் இருந்தாலும் இந்த சிகிச்சையால் முல்லை கஷ்டப்படுவதால் வேண்டாம் என கதிர் சொல்கிறார்.
கதிர் சொன்னதை கேட்டு முல்லையும் சரி என சொல்லிவிட்டு போனை வைக்கிறார். மறுபக்கம் கதிர் வாசலில் அமர்ந்திருக்க அப்போது முல்லை வருகிறார். முல்லையிடம் கதிர் நான் டிரீட்மென்ட் வேண்டாம் என சொன்னது உனக்கு கவலை இல்லையே என கேட்க, அதெல்லாம் இல்லை என முல்லை சொல்கிறார். பின் கதிர் உனக்கு குழந்தை என்றால் மிகவும் பிடிக்கும் என எனக்கு தெரியும் அதான் கேட்கிறேன் என சொல்ல, முல்லை எனக்கும் டிரீட்மென்ட் எடுக்க விருப்பம் இல்லை என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
Follow our Twitter Page for More Latest News Updates