பேங்கில் லோன் கேட்க சென்ற பாக்கியா.. எழில் அமிர்தா காதல் பற்றி ஈஸ்வரியிடம் சொன்ன செழியன் – இன்றைய எபிசோட்!

0
பேங்கில் லோன் கேட்க சென்ற பாக்கியா.. எழில் அமிர்தா காதல் பற்றி ஈஸ்வரியிடம் சொன்ன செழியன் - இன்றைய எபிசோட்!
பேங்கில் லோன் கேட்க சென்ற பாக்கியா.. எழில் அமிர்தா காதல் பற்றி ஈஸ்வரியிடம் சொன்ன செழியன் - இன்றைய எபிசோட்!
பேங்கில் லோன் கேட்க சென்ற பாக்கியா.. எழில் அமிர்தா காதல் பற்றி ஈஸ்வரியிடம் சொன்ன செழியன் – இன்றைய எபிசோட்!

விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், பாக்கியா ஈஸ்வரியிடம் செல்வி செகரட்டரி தேர்தலில் நிற்க என் பெயரை சொன்னதாக சொல்ல, உடனே ஈஸ்வரி அதெல்லாம் வேண்டாம் என சொல்கிறார். பின் எழிலுடன் பேங்க் சென்று எழிலிடம் லோன் கேட்கிறார்.

பாக்கியலட்சுமி

இன்று “பாக்கியலட்சுமி” சீரியலில், ஜெனியிடம் ஈஸ்வரி நன்றாக சாப்பிட வேண்டும் என சொல்ல, உடனே ஜெனி நான் எடை அதிகமாகிவிடுவேன் என சொல்கிறார். உடனே அப்படி எல்லாம் சொல்ல கூடாது என ஈஸ்வரி சொல்கிறார். அப்போது பாக்கியா செல்வி சண்டை போட்டுக் கொண்டு வருகின்றனர். அப்போது ஈஸ்வரி ஏன் இருவரும் சண்டை போடுறீங்க என கேட்க, ஜெனியும் மீட்டிங் தான சென்றுவிட்டு வரீங்க என கேட்கிறார். உடனே ஈஸ்வரி நான் சொன்ன புகார் எல்லாம் செய்தாயா என கேட்க, செல்வி அவங்களுக்கு நம்ம பிரச்சனை எதுவும் புரியவில்லை. பெண்கள் செகரட்டரி தேர்தலில் நின்றால் தான் சரியாக வரும் என செல்வி சொல்கிறார்.

Follow our Instagram for more Latest Updates

உடனே பாக்கியா இவள் அதற்கு தான் ஒரு வேலை செய்ததாக சொல்ல, செல்வி நான் அக்கா நிற்பதாக சொன்னேன் என சொல்கிறார். பின் ஈஸ்வரி அதை கேட்டு அதிர்ச்சி அடைய, அதெல்லாம் வேண்டாம் பாக்கியா என சொல்கிறார். ஜெனி சூப்பர் என சொல்ல, ஈஸ்வரி இந்த வேலை எல்லாம் நமக்கு வேண்டாம் என சொல்கிறார். மறுநாள் எழிலுடன் பாக்கியா பேங்க் செல்கிறார். அங்கே பாக்கியாவை உட்கார வைத்துவிட்டு எழில் உள்ளே செல்கிறார். பாக்கியாவிற்கு ஏற்கனவே கோபி உடன் பேங்க் வந்த நியாபகம் வருகிறது. பின் எழில் உள்ளே சென்று மேனேஜரை பார்த்து புது தொழில் செய்ய லோன் கேட்கிறார்.

பின் மேனேஜர் பார்த்து சொல்வதாக சொல்ல எழில் வெளியே வந்து கண்டிப்பாக லோன் கிடைக்கும் என சொல்கிறார். மறுபக்கம் ராமமூர்த்தி இனியா மயூராவிற்கு கதை சொல்கிறார். அப்போது மயூரா நீங்க நல்லவங்களா என கேட்க, பாட்டி போன் செய்து உங்களுடன் பேச கூடாது என சொன்னதாக சொல்கிறார். எல்லாரும் நல்லவங்க தான் என தாத்தா சொல்ல, அம்மா சொன்னதாக சொல்கிறார். அப்போது ராதிகா வந்து ராமமூர்த்தியிடம் சாப்பிட்டீங்களா என கேட்க ராமமூர்த்தி சாப்பிட்டதாக சொல்கிறார். பின் ராதிகா எல்லாருக்கும் காபி ஜூஸ் கொடுக்கிறார்.

சீரியல் டூ சினிமா .. அட இவுங்க ரெண்டு பேருமே இனி ஹீரோயின் ஆ – மகிழ்ச்சியில் ரசிகர்கள்!

அவர் கோபி உடன் இருந்த அழகான தருணங்களை நினைத்து பார்க்கிறார். பின் எல்லாருக்கும் அன்பாக ராதிகா சமைத்து கொடுக்கிறார். பின் எழில் வர ஈஸ்வரி ஏன் ஒரு மாதிரி இருக்கிறாய் என கேட்கிறார். அப்போது செழியன் எழில் காதல் பற்றி பேச ஜெனி பேச வேண்டாம் என சொல்கிறார். பின் ஈஸ்வரி செழியனிடம் யாரை காதலிப்பதாக கேட்க அமிர்தாவை என செழியன் சொல்கிறார். அதை கேட்டு ஈஸ்வரி அதிர்ச்சி அடைகிறார். பின் ஜெனி அப்படி எல்லாம் இருக்காது என சொல்ல, ஈஸ்வரி அப்படி எல்லாம் எதாவது இருந்தால் அதை நான் நடக்கவே விடமாட்டேன் என சொல்கிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!