தமிழகத்தில் டிசம்பர் மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
தமிழகத்தில் பல இடங்களில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நோக்கில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் சென்னை கோட்டை ரெயில் நிலையத்தின் அருகே உள்ள ராணுவ கலையரங்கத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்பு முகாம்:
தமிழகத்தில் வேலைவாய்ப்பு இல்லாதவர்களின் எண்ணிக்கையை குறைக்க அரசே பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மேலும் ஒவ்வொரு மாவட்டத்தில் உள்ள வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டுதல் மையம் சார்பில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அந்த வகையில் சென்னை கோட்டை ரெயில் நிலையத்தின் அருகே உள்ள ராணுவ கலையரங்கத்தில் முன்னாள் படைவீரர்கள் மற்றும் அவர்களை சார்ந்தவர்களுக்கான தனியார் துறை வேலை வாய்ப்பு முகாம் டிசம்பர் மாதம் 14, 15, 16 ஆகிய தேதிகளில் நடத்தப்பட உள்ளதாக தர்மபுரி மாவட்ட கலெக்டர் சாந்தி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
2021-22 ஆம் ஆண்டிற்கான பள்ளிக் கட்டணம் குறித்த முக்கிய அறிவிப்பு – அரசு புதிய உத்தரவு!
Exams Daily Mobile App Download
மேலும் அதில் 35 முதல் 55 வயது வரை உள்ள முன்னாள் படை வீரர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமில்லாமல் அடுத்த ஆண்டு ஜூன் மாதம் கல்வி படிப்பை முடிப்பவர்கள் மற்றும் இளங்கலை, முதுகலை பட்டதாரிகளில் 22 முதல் 30 வயது வரை உள்ளவர்கள் இந்த முகாமில் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு [email protected] என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம். மேலும் இந்த முகாமில் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.