தமிழக தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிப்பு – தாளாளர் கைது!
தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாகுவது அதிகரித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை தனியார் பள்ளியில் தாளாளர் பாலியல் புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
தமிழகத்தில் பள்ளிகளில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைகள் நடந்து வருவது சமீப காலமாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளது. பாடம் நடத்தும் ஆசிரியர்களே இது போன்ற வேலைகளில் ஈடுபடுவதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் புகார் தெரிவித்து வருகின்றனர். கடந்த வருடம் தனியார் பள்ளியில் பயின்ற மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Follow our Instagram for more Latest Updates
இந்த நிகழ்விற்கு பிறகு பல பள்ளிகளில் மாணவிகள் மற்றும் மாணவிகளின் பெற்றோர்கள் தாமாக முன் வந்து காவல்துறையிடம் புகார் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னையில் திருநின்றவூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் தாளாளர் மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார்கள் எழுந்தது. இதனை கண்டித்து பொதுமக்கள் பள்ளியின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
28,000 வேலையில்லா இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனம் – மாநில அரசின் சூப்பர் திட்டம்!
Exams Daily Mobile App Download
இதையடுத்து பள்ளி தாளாளர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதனால் திருநின்றவூர் அந்த தனியார் பள்ளிக்கு ஒரு வாரம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது நடைபெற்று வரும் தேர்வுகள் அனைத்தும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.