28,000 வேலையில்லா இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனம் – மாநில அரசின் சூப்பர் திட்டம்!
மாநிலத்தில் வேலையில்லாத இளைஞர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி தர அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தற்போது வேலையில்லா இளைஞர்களுக்கு பயன்படும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
இரு சக்கர வாகனம்
உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடி நிலை நிலவி வரும் சூழலில் வேலைவாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. இந்த நிலையில் இந்தியாவில் வேலையில்லா இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி கொடுப்பதற்கு பல்வேறு வகையான நலத்திட்டங்களை மத்திய மற்றும் மாநில அரசுகள் அறிமுகப்படுத்தி வருகின்றனர். இதையடுத்து தற்போது கர்நாடகா மாநிலத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவும் விதமாக அம்மாநில சமூக நலத்துறை அமைச்சர் கோட்டா ஸ்ரீனிவாஸ் பூஜாரி சூப்பரான திட்டம் குறித்த அறிவிப்பை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Follow our Instagram for more Latest Updates
அவர் தெரிவித்துள்ளதாவது, மாநிலத்தில் இருக்கும் ஒவ்வொரு தொகுதியிலும் 100 இருசக்கர வாகனங்களை வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி மாநிலம் முழுவதும் 28000 வேலையில்லா இளைஞர்களுக்கு இரு சக்கர வாகனத்தை வழங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு வேலையில்லா தாழ்த்தப்பட்ட சாதி மற்றும் பழங்குடியின இளைஞர்கள் சேவா சிந்து போர்ட்டலில் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
தமிழக அரசின் ரூ.2 லட்சம் உதவித்தொகை.. விண்ணப்பங்கள் வரவேற்பு – மாவட்ட ஆட்சியர் அறிக்கை!
Exams Daily Mobile App Download
மேலும் இத்திட்டம் மூலமாக இரு சக்கர வாகனத்திற்கு அரசு சார்பாக ரூ.50,000 வழங்கப்படும் எனவும் வங்கி மூலமாக ரூ.20,000 கடன் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த இரு சக்கர வாகனத்தை பயன்படுத்தி வேலையில்லா இளைஞர்கள் மீன்பிடித்தல், காய்கறிகள், ஆடைகள் ஆகியவற்றை விற்பதற்கும் சுயதொழில் புரிவதற்கும் பயன்படுத்தி கொள்வார்கள் என கூறியுள்ளார்.