பொதுமக்கள் கவனத்திற்கு.. நவம்பர் 8 (செவ்வாய்க்கிழமை) வங்கிகளுக்கு விடுமுறை? – முழு விவரம் உள்ளே!
நவம்பர் மாதம் வார இறுதி விடுமுறை நாட்கள் மற்றும் முக்கிய பண்டிகைகள் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட உள்ளது. இந்நிலையில், நவம்பர் 8ம் தேதியான குருநானக் ஜெயந்தி பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்படுமா என்பது குறித்து மக்களிடம் குழப்பம் நிலவி வருகிறது. இது குறித்து இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்ளலாம்.
வங்கி விடுமுறைகள்:
நாடு முழுவதும் அறிவிக்கப்படும் தேசிய விடுமுறை தினங்களில் மட்டுமே அனைத்து வங்கிகளும் மூடப்பட்டிருக்கும். மற்ற படி, மாநில வாரியான பண்டிகைகள் மற்றும் திருவிழாக்களுக்கு குறிப்பிட்ட மாநிலங்களில் மட்டுமே விடுமுறை அளிக்கப்படும். நவம்பர் மாதம் மொத்தமாக வார இறுதி ஞாயிற்று கிழமை மற்றும் 2,4 சனிக்கிழமைகளில் உள்ள விடுமுறை தினங்கள் 6 நாட்கள் உள்ளது.
தமிழகத்தில் இனி சனிக்கிழமையும் பள்ளிகள் இயங்கும் – அமைச்சர் அன்பில் மகேஷ் அதிரடி அறிவிப்பு!
Follow our Instagram for more Latest Updates
இதைத்தவிர நவம்பர் 8ம் தேதியான செவ்வாய்க்கிழமை அன்று குருநானக் ஜெயந்தி பண்டிகை காரணமாக ஐஸ்வால், பேலாப்பூர், போபால், புவனேஸ்வர், சண்டிகர், டேராடூன், ஹைதராபாத், ஜெய்ப்பூர், ஜம்மு, கான்பூர், கொல்கத்தா, லக்னோ, மும்பை, நாக்பூர், புது டெல்லி, ராய்ப்பூர், ராஞ்சி, சிம்லா மற்றும் ஸ்ரீநகர் போன்ற பகுதிகளில் மட்டுமே வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும், மற்ற மாநிலங்களில் வங்கிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.