தமிழக அரசு சத்துணவு திட்ட பிரிவில் வேலை – சம்பளம்: ரூ.12000/- || M.S. Office தெரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம்!
சிவகங்கை மாவட்டம் சத்துணவு திட்ட பிரிவில், திருப்பத்தூர், எஸ்.புதூர், சாக்கோட்டை மற்றும் கண்ணங்குடி ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள கணினி இயக்குபவர் பணியிடங்களை நிரப்ப புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இந்த அறிவிப்பின் படி, 4 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே தகுதியானவர்கள் இந்த வாய்ப்பை தவற விடாமல் 15/11/2022 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | சிவகங்கை மாவட்டம் சத்துணவு திட்ட பிரிவு |
பணியின் பெயர் | கணினி இயக்குபவர் |
பணியிடங்கள் | 04 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 15/11/2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online |
சத்துணவு திட்ட பிரிவு காலிப்பணியிடங்கள் :
கணினி இயக்குபவர் பதவிக்கு என 4 பணியிடங்கள் காலியாக உள்ளன.
கணினி இயக்குபவர் வயது வரம்பு:
இப்பதவிக்கு 01.10.2022 அன்று சூறைந்தபட்ச வயது வரம்பு 18 வயது பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். பொது வகுப்பினர் 30 வயதுக்கு மிகாமலும், மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் மற்றும் சீர்மரபினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் பிற்படுத்தப்பட்ட முஸ்லீம் ஆகியோருக்கு அதிகபட்ச வயது வரம்பு 32 வயதுக்கு மிகாமலும், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு அதிகபட்ச வயது 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும். . இதர வகுப்பைச்சேர்ந்த மாற்றுதிறனாளிகளுக்கு 10 ஆண்டு வயது வரம்பு சலுகை உண்டு.
BOB Financial – ல் பட்டதாரிகளுக்கு அருமையான வேலை – விண்ணப்பங்கள் வரவேற்பு!
Exams Daily Mobile App Download
கல்வி தகுதி:
அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு பிரிவில் டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். கணினியில் M.S. Office அனுபவம் பெற்றவராக இருத்தல் வேண்டும். கீழ்நிலை தட்டச்சு ஆங்கிலம் மற்றும் தமிழ் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
- கணினித்தேர்வு
- நேர்முகத்தேர்வு
Computer Operator சம்பள விவரம்:
கணினி இயக்குபவர் – ரூ.12,000/- . இப்பணியிடம் பகுதி நேர அடிப்படையில் முற்றிலும் தற்காலிகமானது ஆகும். இப்பணியிடம் ஒரு வருட காலத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow our Instagram for more Latest Updates
விண்ணப்பிக்கும் முறை:
https://agaram.tn.gov.in/wlcopen/formpage_open.php?id=43-172 என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை ஆன்லைன் மூலம் பூர்த்தி செய்து 15-11-2022 மாலை 5.45 க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.