UIDAI : புதிய வசதி அறிமுகம் – இனி ஆதார் மையங்களை கண்டுபிடிப்பது ஈசி!!
இந்தியாவில் தனி நபரின் முக்கிய அடையாள ஆவணங்களில் ஒன்றாக இருக்கும் ஆதார் அட்டையானது UIDAI ஆல் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் UIDAI ஆணையம் இஸ்ரோவுடன் இணைந்து புதிய வசதி ஒன்றை கொண்டு வர உள்ளது.
ஆதார் மையம்
இந்தியாவில் தற்போது அனைத்து பயன்பாடுகளுக்கும் ஆதார் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் நீங்கள் ஆதார் வைத்திருக்க வேண்டியது அவசியமானதாகும். அதனால் ஆதாரில் இருக்கும் உங்களின் தகவல்கள் அனைத்தும் அரசின் மற்ற ஆவணங்களில் இருப்பது போன்று சரியானதாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் தவறான தகவல்கள் இருப்பின் அதை திருத்தி கொள்ள UIDAI ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. இதனை ஆன்லைன் முறையிலும், நேரடி முறையிலும் நீங்கள் மேற்கொள்ளலாம்.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதன்படி ஆன்லைன் முறையில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டுமெனில் உங்கள் பகுதிக்கு உட்பட்ட ஆதார் மையத்திற்கு செல்ல வேண்டியிருக்கும். ஆனால் நீங்கள் இருக்கும் பகுதியில் ஆதார் மையம் எங்கு உள்ளது என்பதை கண்டறிய சிரமமாக இருக்கும். இதனை எளிதாக்கும் விதமாக ஆதார் வழங்கும் அமைப்பான இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. இதில் முதற்கட்டமாக NRSC, இஸ்ரோவுடன் இணைந்து இருப்பிடம் கண்காணிக்கும் வசதியை ஏற்படுத்தி தருவதற்கான ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது.
Infosys நிறுவன ஊழியர்களுக்கு 25% சம்பள உயர்வு – வெளியான ஹேப்பி நியூஸ்!!
Exams Daily Mobile App Download
அதன்படி ஆதார் மையத்தை கண்டறிய புவன் ஆதார் போர்ட்டலைத் தொடங்கியுள்ளதாக UIDAI ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்த போர்ட்டலை பயன்படுத்தி நீங்கள் ஆதார் மையத்தின் தகவலை ஆன்லைன் மூலமாகவே தெரிந்து கொள்ளலாம். ஆதார் மையத்திற்கு செல்வதற்கான வழியும் இதில் கிடைக்கும். மேலும் நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்து ஆதார் மையம் எவ்வளவு தூரத்தில் இருக்கிறது உள்ளிட்ட தகவல்களும் கிடைக்கும்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்