500 ஊழியர்களை தடாலடியாக வீட்டுக்கு அனுப்பிய பிரபல தனியார் நிறுவனம் – திண்டாடும் பணியாளர்கள்!!
உலகம் முழுவதும் கொரோனா காரணமாக பொருளாதாரத்தில் மிகப்பெரிய சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் பல ஐடி நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்.
ஊழியர்கள் வேலைநீக்கம்:
உலகம் முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டது. இதனால் பெரும்பாலான நிறுவனங்கள் நஷ்டத்தில் இயங்கி கொண்டிருக்கின்றன. அதனால் தங்களின் பொருளாதார நிலையை சரி செய்ய பல நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர். இதனால் ஐடி ஊழியர்கள் நிலை மிகவும் மோசமாக உள்ளது. அந்த வகையில் தற்போது அமெரிக்க உடற்பயிற்சி மற்றும் உடற்பயிற்சி உபகரணம் தயாரிப்பு நிறுவனமான Peloton தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது.
கொரோனா பரவலுக்கு பிறகு பெரும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளதால் இந்நிறுவனம் மீண்டு வருவதற்கும் மற்றும் தனது வளர்ச்சியை மேம்படுத்துவதற்கும் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. இந்த பணி நீக்கத்திற்கு முக்கிய காரணமாக ஜூன் மாதத்தில் இருந்து, சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டதே காரணம் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக பொதுமக்கள் தங்களின் அனாவசியமான செலவுகளை குறைத்து உள்ளதால் Peloton நிறுவனம் கடும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
ஐடி பணியாளர்களே உஷார்! குறையும் வேலைவாய்ப்பு – வெளியான அதிர்ச்சி தகவல்!
Exams Daily Mobile App Download
மேலும் இது தொடர்பாக பெலோட்டனின் தலைமை நிர்வாக அதிகாரி தெரிவித்துள்ளதாவது, இந்நிறுவனம் ஆனது சுமார் 500 பணியாளர்களை குறைக்க உள்ளதாக திட்டமிட்டுள்ளது. அதாவது 12% ஊழியர்களை குறைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் அந்நிறுவனத்தில் 3 முறை இதுவரை வேலை நீக்கம் செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து தற்போது 4வது முறையாக 500 ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்