வீட்டு உரிமையாளர்கள் கவனத்திற்கு – சென்னை மாநகராட்சியின் அதிரடி முடிவு!
பொதுமக்கள் உரிய நேரத்தில் வரி செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில், மாநகராட்சி நிர்வாகம் அடிக்கடி புதிய சலுகைகளை அறிவித்து வருவது வழக்கம். அதுபோல் தற்போது சென்னை மாநகராட்சி புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி:
மத்திய மற்றும் மாநில அரசுகள் பொதுமக்களின் மீது குறிப்பிட்ட சில வரிகளை விதித்து வருகிறது. இந்த வரிகள் தான் அரசின் வருவாயில் முக்கிய பங்கை வகிக்கிறது. இதனால் மக்கள் வரிகளை உரிய நேரத்தில் செலுத்துவது அவசியமாகிறது. மக்களுக்கு விதிக்கப்படும் நேர்முக வரிகளான சொத்து வரி, நிலவரி, வருமானவரி போன்றவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளது.
இவற்றை மக்கள் உரிய நேரத்தில் செலுத்துவதை ஊக்குவிக்கும் வகையில் அரசு பல்வேறு நடவடிக்கைகளை கையாளும். ஊர் முழுவதும் ரேடியோக்கள் மூலமும், போஸ்டர்கள் மூலமும், அறிவிப்புகள் வெளியிடப்பட்டு மக்களுக்கு வரி செலுத்துவது நினைவூட்டப்படும். வரிகளை காலம் தாழ்த்தி செலுத்தும் நபர்களுக்கு அபாரதங்கள் விதிக்கப்படுவதும் உண்டு.
TN TET தேர்வில் வெற்றி பெற வேண்டுமா? இந்த Study Material மட்டும் போதும்!! வெற்றி நிச்சயம்!!
Exams Daily Mobile App Download
இதனை தவிர்க்க வேண்டி மக்கள் அரசு அறிவித்துள்ள தேதிக்குள் வரிகளை செலுத்திக் கொள்வது நல்லது. தற்போது கடைசி நேரத்தில் அதிக நபர்கள் செலுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளை களையும் விதமாக, சென்னை மாநகராட்சி ஒரு புதிய அறிவிப்பை மக்களுக்கு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆண்டின் 2ம் தவணை சொத்துவரிகளை அக்டோபர் 15ம் தேதிக்குள் செலுத்தும் நபர்களுக்கு 5% தள்ளுபடி அளிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. இது மக்களிடம் இருந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
வீட்டு வரி கட்ட நெட் யை திறந்தால்… அதில் தெளிவாக தகவல்கள் குறிப்பிட பட வில்லை… ஏற்கனவே கட்டி இருந்தால் “இந்த 2022-2023ஆண்டு, வரையில் ..கட்டிவீட்டீர்கள்” என தெளிவு படுத்த வேண்டும்…
நாய்க்கு எலும்பு துண்டு போடுவது போல் ஒழுங்காக வரி செலுத்தும் நல்லவர்களுக்கு 5% போனஸ் சரி…கடந்த பல ஆண்டுகளாக 40% ஆண்டு தோறும வரியே செலுத்தாத மிக மிக நல்ல அரசியல்வியாதிகள்..பெரியமனிதர்கள் மீது என்ன நடவடிக்கை.. அதையும் மாநகராட்சி தெளிவாக சொல்லலாமே..!!