TNPSC தேர்வர்கள் கவனத்திற்கு – விண்ணப்பிக்க இன்றே இறுதி நாள்!
தமிழ்நாடு அரசு வனத்துறையில் காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணியிடங்களுக்கு விண்ணப்பபதிவுகள் இன்றுடன் முடிவடைய உள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர்கள் விரைந்து விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
TNPSC :
தமிழகத்தில் மக்கள் கொரோனா பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் நிலையில் TNPSC தேர்வாணையம் அனைத்து துறைகளிலும் உள்ள காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையை வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் குரூப் 2,2A, குரூப் 4 & VAO தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகி அதற்கான விண்ணப்பபதிவுகளும் நடைபெற்றது. அதனை தொடர்ந்து குரூப் 2,2A தேர்வு கடந்த மே மாதம் நடைபெற்றது. அடுத்ததாக ஜூலை 24ம் தேதி குரூப் 4 & VAO தேர்வு நடைபெற்றது. அதனை தொடர்ந்து வனத்துறை வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியது.
அதில் மொத்தமுள்ள 10 பணியிடங்களுக்கு இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டது. மேலும் வயது வரம்பு 32 வயதுக்குள் இருக்க வேண்டும் என்றும் MBC DNC, MBC, SC, ST உள்ளிட்ட பிரிவினருக்கு வயது வரம்பு 37 ஆக அளிக்கப்பட்டுள்ளது. இந்த பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த எழுத்து தேர்வை எழுத விரும்புபவர்கள் 06.09.2022க்குள் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, இந்த காலக்கெடு இன்றுடன் முடிவடைய உள்ளது.
கொரோனா கால ஊரடங்கில் தளர்வுகள் – பாதிப்பு குறைவு எதிரொலி!
இந்த எழுத்துத் தேர்வு மூன்று தாள்களாக நடத்தப்படும் முதல் தாளில் தமிழ் மொழித் தகுதித் தேர்வு, 2ம் தாளில் 100 பொது அறிவு வினாக்கள் இடம்பெறும் மூன்றாம் தாள்களில் தேர்வரின் விருப்ப பாடங்களில் இருந்து வினாக்கள் இடம்பெறும். தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் என்பதால் விரைந்து விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. விண்ணப்பக் கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும். மேலும் TNPSC நிரந்தர பதிவு வைத்திருப்பவர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்
Vikash