தமிழகத்தில் 12ம் வகுப்பு மறுகூட்டலுக்கு இன்று முதல் விண்ணப்பம் – 2 நாள் அவகாசம்!
தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மறுதேர்வு முடிவுகள் நேற்று வெளியாகியுள்ளது. இந்நிலையில், மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மறுகூட்டல்:
தமிழகத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு இந்தாண்டு தான் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனையடுத்து, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டுடன் ஒப்பிட்டு பார்க்கும் போது இந்தாண்டு 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி விகிதம் மிகவும் குறைந்திருந்தது. தேர்வில் கலந்துகொள்ளாத மாணவர்கள் மற்றும் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை மாதத்தில் மறுதேர்வு வைக்கப்பட்டது.
இந்நிலையில், 12 ஆம் வகுப்பு மறுதேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டது. அதாவது, 12 ஆம் வகுப்பு மறுதேர்விற்கான முடிவினை தெரிந்துகொள்ள விரும்பினால் https://www.dge.tn.gov.in/ என்கிற இணையதள முகவரி பக்கத்திற்கு சென்று மதிப்பெண் விவரங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மறுதேர்வு முடிவில் ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் மறுகூட்டல் அல்லது விடைத்தாளின் நகலை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இனி எலக்ட்ரிக் கார்கள் மட்டும் தான் – வோல்க்ஸ்வேகன் நிறுவனம் அறிவிப்பு!
Exams Daily Mobile App Download
அதாவது, மறுகூட்டல் அல்லது விடைத்தாளின் நகலை பெற இன்று முதல் இரண்டு நாட்களுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வாளர்கள் அவரவர் மாவட்டத்தில் உள்ள அரசு தேர்வுகள் உயர் இயக்குனர் அலுவலகத்தில் மறுதேர்விற்கான உரிய கட்டணத்தை செலுத்தி விண்ணப்பித்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளின் நகலை பெற விரும்பினால் ஒரு பாடத்திற்கு ரூ. 275 செலுத்த வேண்டும் மற்றும் மறுகூட்டலுக்கு ஒரு பாடத்திற்கு ரூ.205 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், உயிரியல் பாடத்திற்கு மட்டும் ரூ.305 செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்