தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு திட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் கற்பனை திறன், படைப்புத்திறன் மற்றும் வாசிப்புத்திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக பள்ளிக்கல்வித்துறை புதிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
நூலக திட்டம்:
தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளிலும் மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக நூலகங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும், நூலகத்திற்கு செல்வதற்காகவே தனியாக நேரம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால், மாணவர்கள் முறையாக நூலகங்களை பயன்படுத்துவதில்லை. இந்நிலையில், பள்ளி மாணவர்களின் வாசிப்புத் திறனையும் படைப்புத் திறனையும் வளர்க்க வேண்டும் என்பதற்காக பள்ளிக் கல்வித் துறை முக்கிய திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.
தமிழக பள்ளி மாணவர்களுக்கு ரூ.1500 க்கான ஊக்கத்தொகை திட்டம் – விண்ணப்பங்கள் வரவேற்பு!
அதாவது, ஒவ்வொரு பள்ளியிலும் உள்ள மாணவர்களை 6-8.9-10 11-12 என மூன்று பிரிவுகளாக பிரித்து வாரத்திற்கு ஒரு புத்தகம் என்கிற கணக்கில் மாணவர்களுக்கு வீட்டிற்கு எடுத்து செல்ல அனுமதி வழங்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த புத்தகத்தை மாணவர் முழுமையாக வாசித்து முடித்த பின்னர் அடுத்த புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படித்த புத்தகத்தை பற்றி ஏதேனும் விமர்சனங்கள் மற்றும் அதனை வைத்து நாடகம் மற்றும் ஓவியம் ஆகியவற்றை வரையலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இது போன்ற சிறப்பான படைப்புக்களை கொடுக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும் எனவும், அந்த மாணவர்களை வட்டார அளவிலான போட்டிகளில் பங்கெடுக்க வழிவகை செய்யலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வட்டார அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் மாவட்ட அளவிலான போட்டிகளுக்கும், இதில் வெற்றி பெறுபவர்கள் மாநில அளவிலான போட்டிகளுக்கும் தகுதி பெறுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்