Apprentices பணிக்கு ரூ.8050/- உதவித்தொகையுடன் வேலைவாய்ப்பு – விண்ணப்பங்கள் வரவேற்பு!
எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (ECIL) ஆனது வேலைவாய்ப்பு பற்றிய புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் ITI Trade Apprentices பணிக்கு என மொத்தமாக 284 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தேர்வில்லாமல் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்ட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. எனவே இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் தவறாது விண்ணப்பித்து பயன் அடையுமாறு இப்பதிவின் மூலம் அழைக்கப்படுகிறார்கள்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2022
நிறுவனம் | Electronics Corporation of India Limited (ECIL) |
பணியின் பெயர் | ITI Trade Apprentices |
பணியிடங்கள் | 284 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.09.2022 |
விண்ணப்பிக்கும் முறை | Online & Offline |
ECIL காலிப்பணியிடங்கள்:
தற்போது வெளியான அறிவிப்பில், ITI Trade Apprentices பணிக்கு என மொத்தமாக 284 பணியிடங்கள் எலெக்ட்ரானிக்ஸ் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட்டில் (ECIL) காலியாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
ITI Trade Apprentices கல்வி தகுதி:
ITI Trade Apprentices பணிக்கு அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிலையங்களில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் ITI முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
ITI Trade Apprentices வயது வரம்பு:
- விண்ணப்பதாரர்கள் 14.10.2022 அன்றைய நாளின் படி, குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 25 வயதிற்குள் உள்ளவராக இருப்பது அவசியமானது ஆகும்.
- OBC – 03 ஆண்டுகள், SC / ST – 05 ஆண்டுகள் என வயது தளர்வுகளும் தரப்பட்டுள்ளது.
ITI Trade Apprentices உதவித்தொகை:
இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் பணியாளர்கள் குறைந்தபட்சம் ரூ.7,700/- முதல் அதிகபட்சம் ரூ.8,050/- வரை உதவித்தொகையாக பெறுவார்கள்.
ECIL தேர்வு செய்யும் முறை:
ITI Trade Apprentices பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ITI-யில் பெற்ற மதிப்பெண்கள் (Merit List) அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவார்கள்.
தமிழகத்தின் சிறந்த coaching center – Join Now
ECIL விண்ணப்பிக்கும் வழிமுறை:
- இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் திறமை உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ இணையதள இணைப்பின் மூலம் தங்களது விண்ணப்பத்தை Online-ல் பதிவு செய்து கொள்ளலாம்.
- மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
- 12.09.2022 என்ற கடைசி நாளுக்குள் பெறப்படும் விண்ணப்பங்கள் மட்டுமே இப்பணிக்கு என ஏற்றுக் கொள்ளப்படும்.