தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 1) மின்தடை செய்யப்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் வேலம்பாளையம் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை (ஆகஸ்ட் 1) மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் அப்பகுதியை சுற்றியுள்ள இடங்களுக்கு காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய செயற்பொறியாளர் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகம் முழுவதுமே தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மின் துண்டிப்பு என்பது அனைத்து பகுதிகளிலும் தொடர்ச்சியாக செய்யப்பட்டு வருகிறது. மேலும், மழைக்காலங்களில் தான் பெரும்பாலும் மின்கசிவு ஆகிய நிகழ்வுகளும் ஏற்படுகின்றன. அதாவது, மின்கசிவு ஏற்பட்டு சாலையில் தேங்கி கிடக்கும் நீரின் காரணமாக அறியாத விதமாக சில விபத்துகளும் ஏற்பட காரணமாகி விடுகின்றன. அதனால் இந்த விபத்துகளில் இருந்து மீள அவ்வப்போது அரசின் சார்பாக மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் அனைத்தும் முறையாக பழுது பார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அவ்விதமாக நாளை (ஆகஸ்ட் 1) வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின் விநியோகம் இருக்காது என தமிழ்நாடு மின்சார வாரியம் அவினாசி மின்பகிர்மான வட்ட செயற்பொறியாளர் பரஞ்ஜோதி தகவல் வெளியிட்டுள்ளார். அதாவது வருகிற திங்கட்கிழமை வேலம்பாளையம் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணியின் நிமித்தம் அங்கிருந்து மின் விநியோகம் பெறக்கூடிய ஆத்துப்பாளையம், 15 வேலம்பாளையம், அனுப்பர்பாளையம், திலகர் நகர், அங்கேரிபாளையம், பெரியார்காலனி, அம்மாபாளையம்,
TN TRB யின் விரிவுரையாளர்கள் காலிப்பணியிடங்கள் 2022 – முக்கிய அறிவிப்பு வெளியீடு
அனுப்பர்பாளையம்புதூர், வெங்கமேடு, மகா விஷ்ணுநகர், தண்ணீர் பந்தல் காலனி, ஏ.பி.வி.லே அவுட், போயம்பாளையம், சக்தி நகர், பாண்டியன் நகர், நேரு நகர், குருவாயூரப்பன்நகர், நஞ்சப்பாநகர், லட்சுமிநகர், இந்திராநகர், பிச்சம்பாளையம் புதூர், குமரன்காலனி, செட்டிபாளையம், கருப்பராயன் கோவில் வீதி, சொர்ணபுரி லே அவுட், ஜீவாநகர், அன்னபூர்ணா லேஅவுட், திருமுருகன்பூண்டி விவேகானந்தா கேந்திரா பகுதி, டிடிபி மில் ஆகிய பகுதிகளுக்கு அன்றைய தினம் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை மின்தடை ஏற்படும் என அந்த செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளது.